போட்டிகள் எனக்குள் தாங்கொணா வெறிகளையும் கற்பனைகளையும் விதைக்குமேயன்றி அதில் ஈடுபடவோ வெற்றி பெறவோ சாத்யப்படுவதில்லை என்பதை பல போட்டிகளில் பங்குபெற்று உணர்ந்திருக்கிறேன்.
ஆனாலும் போட்டி என்பது ஓர் ஆரோகியமான போக்கு என்பதை அறிவேன். எந்த விதமான தன்மைகளுக்கும் போட்டி என்பது இன்றியமையாத ஒன்றென்றே கருதுகிறேன். போட்டி இல்லாத எந்த விஷயங்களும் ஓர் வீரியமிழந்தே காணக்கூடும். போட்டி என்று வந்த பிறகே அந்த விஷயம் வசீகரமாக மாறும்..
அவ்விதமாகத்தான் தமிழ்மணம் அறிவித்திருக்கிற போட்டியை உணர்கிறேன். என் பங்கிற்கு எனது ரெண்டொரு படைப்புகளை ... அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க .... வெளியிட முனைந்து இருக்கிறேன் என்ற போதிலும் , பல அறிவுப்பூர்வமான எழுத்தாளர்கள் பங்கு பெறுகிற இந்த கோதாவில் என் பங்கேற்பு கேலிக்குரியது என்பதை அனுமானித்தே நான் என் படைப்புகளை வெளியிட நேர்ந்திருக்கிறது...
நன்றி.. வெற்றி பெறக்காத்திருக்கிற புத்திசாலிகளுக்கு என் ADVANCED CONGRATULATIONS.
அன்பு
சுந்தரவடிவேலு....
No comments:
Post a Comment