Sunday, August 9, 2009

முரண்கள்..

என் பேனா கூட


உன்னைப்பற்றியே


என்னை எழுதச்சொல்கிறது..


நீ மட்டும் ஏனோ


உன் உதடுகளுக்கு


புன்னகைக்கப்


பயிற்றுவிக்காமல் இருக்கிறாய்..


என் பேனாவோடு


காகிதங்களும் சிநேகம் போலும்..


அவைகளும் உன்னைக்குறித்து


எழுதுவதையே ஊக்குவிக்கின்றன..


நீ மாத்திரம் ஏனோ


பதில் கடிதம் எழுதுவதைக்கூட


கெளரவக் குறைவாக எண்ணி
மௌனத்தையே பிதற்றுகிறாய்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.






1 comment:

  1. முரண்தொடை. மாறுபட்ட சொற்கள்!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...