Friday, August 7, 2009

அசைவ சோகங்கள்....

தாய் முலை முட்டி
பால் குடிக்கிற ஆட்டுக்குட்டியை
ஓர் தாய்மை உணர்வுடன்
ரசிக்க முடிகிற என்னால் -
மட்டன் வறுவல் வாய்க்கு
ரப்பராகத்தெரிந்தால்,
"ஆடு குட்டியா இருந்திருந்தா
அம்சமா இருந்திருக்கும்..."
என்று அங்கலாயிக்கவும் முடிகிறது.


கூண்டிற்குள்ளாக
பரப்பி விடப்பட்டிருந்த
தானியங்களை பொறுக்கிக்
கொத்தி உன்பதில்
தீவிரம் கொண்டு
மற்ற கோழிகளை பரம வைரிகளை
போல் எண்ணி தனது வயிற்றை
நிரப்ப மாத்திரம் ப்ரயத்தனித்து
கொண்டிருந்தது ஓர் வெள்ளை நிறத்திலான
கோழி. அப்போது-
ஓர் வாடிக்கையாளரின் ,"முக்கால் கிலோ
வருவது போல் ஒரு கோழி குடுங்க" என்ற
வேண்டுகோளுக்கு இணங்க
அதே வெள்ளை நிறக் கோழி
தேர்ந்தெடுக்கப்பட்டது.
இன்னும் கூட அதன் பசி தீர்ந்த பாடில்லை...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

1 comment:

  1. மனித உடல மாமிசத்தை வயிற்றில் அரைக்க அமிலம் கொண்டது! பிறகு என்ன, எதுவாயிருந்தாலும்!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...