Saturday, August 29, 2009

எதற்கும் தயாராகும் மனசுகள்....

அன்றெல்லாம்
கனவுகளில் ---
நான் எதிர்பார்த்தாலுமே
கூடப் போதும்.. நீ
வந்து விடுவாய்..!
ஆதலால் அன்றைய
உறக்கங்கள் கூட
இன்றளவும்
வசந்தகால வனப்புகளுடன்
ஞாபகமாய் உள்ளன..

அன்றைய உறக்கம்
வராத இரவுகளில் கூட
நீ கனவாய் வந்தது போன்ற
பிரம்மைகள் உள்ளன..
விழித்திருக்கையில் --
நமது மடிகளில்
மாறி மாறி நாம் கிடந்து
அந்தக் காதல் உற்சவத்தை
உற்சாகமாய்ப் பகிர்ந்து கொண்டோம்..
--இப்படியாக
விழித்திருக்கையிலும் உறங்குகயிலும்
எந்தத் தருவாய்களிலும்
உன்னை நானோ என்னை நீயோ
இழப்பதற்கான சாத்யக்கூறுகளே அற்ற
அந்த இறந்த காலங்களை-----
விவாகரத்து பெற இன்னும்
ஒரு வார அவகாசமே உள்ள
இந்தச் சமயத்தில்
மீண்டும் ஒரு முறை
பகிர்ந்து கொள்ளப்
பிரயாசைப் படுகிறது என் மனது...!!

3 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...