தருணங்கள் புரிந்த தயவால்
உன் தரிசனம் கிடைத்தது..
சினிமா நடிகையை பார்க்க அலைகிற
பாமரன் போல உன் தரிசனத்திற்கு
அலைவதில் ஓர் பேராவல் எனக்கு...
ஓர் நடிகைக்குப் போல அல்லாமல்
உனது சுற்றுப்புறம் சூழ்வாரற்றுத்தானிருந்தது..
ஆனால் என்னை நீ கண்டதும் ஏனோ
மீள முடியாத நெரிசலில் சிக்கித்தவிப்பவள்
போல உணர்வதை அறிந்து நான்
சங்கடப்படுகிறேன்...
ஆகவே உன்னை தரிசிக்க
வாய்ப்பளித்த தருணங்களிடமே
புலம்பி அழுகிறேன்.
"போயும் போயும் உனக்கு சந்தர்ப்பங்களை
அமைத்துக்கொடுதேன் பாரு.."
என்று தருணங்களும் அலுத்துக்கொள்கின்றன
உன்னைப்போலவே...
சுந்தரவடிவேலு
திருப்பூர்.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பா ப்பாவின் குறும்பு எனக்கும் மனைவிக்கும் ரத்தக் கொதிப்பேற்றும்.. முதுகில்அறைந்து விடுவதும் கால்களுக்குக் கீழே நறுக்கென்று கிள்ளி வி...
Very Nice!
ReplyDeletesend this to manushyaputhiran@gmail.com ( uyirmmai )