Monday, August 24, 2009

மேற்கொண்டாவது...


இது நாள் வரை நான் எனது பிளாகில் வெளியிட்டு வந்த கவிதைகள் சிறுகதைகள் அனைத்தும் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்தவைகளே..இன்னும் பல கவிதைகளும் பிற வகையறாக்களும் ..இன்னும் தூசு தட்டப்படாமல் இருக்கின்றன..

அன்றைக்கெல்லாம் எப்படி ஓயாமல் இப்படி எழுதித் தீர்த்தேன் என்று ஆச்சர்யமாக உள்ளது.. இத்தனைக்கும் அன்று நான் எழுதியவைகளில் 75% சிறுபிள்ளைத்தனங்கள் நிரம்பியவைகளே..பிளாகில் வெளியிடக்கூடிய அந்தஸ்துக்களற்றவையே...! மிச்சம் இருக்கிற 25% மட்டும் பெரிய அந்தஸ்து உள்ளதென்று நம்பி வெளியிடவும் பயமாகத்தான் உள்ளது..

சில நேரங்களில் எனது அனுமானங்கள் பொய்த்து விடுவதும் உண்டு.. நான் பிரமாதம் எனக்கருதி வெளியிடும் எனது படைப்புகள் கூட ரசிக்க உகந்ததாகவோ அறிவுப்பூர்வமாகவோ இருப்பதில்லை. அதற்காக நானே என்னைக் குட்டிக் கொள்வதும் உண்டு..

அந்த நாட்களில் கேணத்தனமாகக்கூட எதையேனும் கிறுக்கிக்கொண்டிருந்தேன்., ஆனால் இன்று அவ்விதமெல்லாம் எழுதுகிற மனோபாவம் மிக அரிதாகத் தான் நிகழ்கிறது..

பார்ப்போம் , ஏதாவது உருப்படியாக மேற்கொண்டாவது எழுத சாத்யப் படுகிறதா என்று..

சந்திப்போம்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...