Friday, August 14, 2009

உன் நினைவினிலே.....{ஓர் சிறுகதை முயற்சி}

அன்பு சுபா,
உன் உருவத்தை ஒத்த ஓர் பெண்ணை நேற்று தரிசிக்க நேர்ந்தது. நீயே தானோ என்றோர் சந்தேகம். ஏனெனில் நேருக்கு நேர் நீ என்னை பார்ப்பது போலவே அந்தப்பெண்ணும் என்னைப் பார்க்கிறாள். உன்னுடன் பேச நான் ஆசைப்படுவது போலவே அவளுடனும் பேச ஆசைப்பட்டு, 'எக்ஸ்கியூஸ் மீ மேடம்..நீங்க சுபா தானே?'
"நோ நோ.. அய் யாம் நாட்.." என்றாள்.
ஹோ..அந்தக்குரலில் கூட உனது குரலின் சாயல்..
அவள் நீ இல்லை என்று ஓரளவு நான் புரிந்து கொண்டாலும் கூட, உன்னை ஒத்திருக்கிற ஒரே காரணத்துக்காக நான் அவளுடன் பேச அவா கொண்டேன்.
உனக்கும் அவளுக்குமான மெல்லிய வித்தியாசங்களை மிகவும் சிரமப்பட்டே தான் உணர முடியுமென்று கருதுகிறேன். இருப்பினும் அந்த வித்தியாசங்களை மறுப்பதற்கில்லை.

மறுபடி என்னுடன் பேசுவதை நீட்டிக்க விரும்பாமல், "ஒ.அய் யாம் சாரி " என்று நான் சொன்னதற்கு "இட் இஸ் ஆல்ரைட் " என்று மட்டும் சொல்லி விலகிக்கொண்டாள்.
உன் முகமும் உன் குரலும் என்னை அபரிமிதம் பாதித்தன. அதே சமயம் மறந்தன.மறுபடி தரிசிக்க ஆர்வம் பிறந்தன. ஆதலால் நீயே சலித்துக்கொள்கிற விதமாக உன்னை அனுதினமும் சந்தித்து சந்தித்துப் பேசினேன்.
உனது மனநிலையை நான் உணராதவனல்ல..விவஸ்தை இல்லாதவனும் அல்ல. ஆனாலும் உன்னைப் பாராவிடில் நான் உடலும் மனதும் சோபை இழந்து நைந்து போனேன்.
உன்னை தரிசிப்பதை வாழ்வின் தினசரி லட்சியமாகவும் , வெறும் நினைவுகள் கனவுகள் போன்ற மாயைகளைத்தவிர்த்து நிஜமாகவே உன் அருகாமையில் கிடப்பதையே மிகவும் ஆரோகியமாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தேன்.
[மறுபடி நாளை .. தொடர்கிறேன்....]

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...