ராஜன் நாடார் கடைக்கு போய் எதாவது சரக்கு வாங்கி வரச்சொன்னால் முரளிக்கு எப்பவும் ஓர் அலாதி ஆனந்தம்... கடை ஊழியர்களுக்குத் தடுபபாய் வைத்திருக்கிற அந்தச்சாக்கு மூடைகளில் அஸ்கா சக்கரையும் பொட்டுக்கடலையும் எப்பவும் நிரப்பி வைத்திருப்பார்கள்..ரெண்டையும் மிக்ஸ் செய்து சாப்பிட்ட வண்ணமே அம்மா சொல்லி விட்ட சரக்குகளை நிதானமாக பட்டியலிடலாம்... கடைக்கு வருகிறவர்களில் முக்கால் வாசிப்பேர் அந்த அஸ்கா பொ.கடலை மிக்சிங்கில் லயித்து விடுவார்கள் என்றாலும், அது குறித்து முதலாளியோ ஊழியர்களோ இது வரை எவரையும் கேள்வி கேட்டதாக முரளிக்குப்படவில்லை..
அது கஸ்டமர்களை வரவேற்கிற தந்திரம் என்று உணர்கிற வயதெல்லாம் இன்னும் வரவில்லை.. பக்கத்திலேயே இருக்கிற முருகன் ஸ்டோரில் அவ்வித சலுகைகள் எதுவும் இல்லை. அதுவும் அஸ்கா பொட்டுக்கடலை மூடைகளை அவர்கள் தூரந்தள்ளி வைத்து விட்டதோடு பருப்பு வகையறா மூடைகளை தடுப்புக்கு நிறுத்தி வைத்து விட்டார்கள்..
ஆகவே முரளி போன்ற சின்னப்பய்யங்களுக்கும், ஏன்-பெரியவர்களுக்குமே கூட ராஜன் நாடார் கடை திரும்ப வரவழைக்கிற ஓர் தன்மையை ஏற்படுத்தியிருந்தது..
பென்சில் ரப்பர் வாங்கச்சென்றால் கூட அந்த மிக்சிங்கை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறுவேலை..
ஒவ்வொரு முறையும் அவர்கள் போடுகிற பில்லில் , அந்த அஸ்கா பொட்டுக் கடலைக்கான ஓர் விலையை மறைமுகமாக மற்ற சாமான்களில் திணித்து விடுகிற தந்திரத்தை பெரியவர்களே புரிந்து கொள்ள முடியாத போது முரளி போன்ற வாண்டுகளுக்கு என்ன புரியப்போகிறது?....
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment