அனைவருக்கும் என் காலை வணக்கம்..
தூரி நோன்பு இன்று. ஆகாயத்திலிருந்து ஊஞ்சல் இறங்கியது போல உணரும் அன்றெல்லாம் என் இளமனது. எங்கள் தெருவெங்கும் கிணறு சேந்துகிற கயிறுகள் யாவும் மரங்களில் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தூரிக்கும் ஆடுவதற்கும் ஆட்டுவதற்கும் ஆட்கள் தயார் நிலையில் இருப்பதைப்பார்க்கவே ஏகாந்தம் பிரவகிக்கும் மனசுள்.
நான் தூரியில் அமர்கிற முறை வருகையில் என் இதயத்துக்கு சிறகுகள் முளைக்கத்துவங்கும். வானமே வசப்பட்ட மாதிரி ஓர் அற்புத கிறக்கத்தில் அதற்கும் இதற்குமாக சில நிமிட பறவையாகி குதூகலித்த அந்த இளமைக்கால நினைவுகள் இன்று த்வனிக்கிறது.
ஆனால் இன்றைய குழந்தைகள் அந்த சுகங்களையெல்லாம் இழந்து நிற்பது போல உணர்கிறேன். தொலைக்காட்சிகளிலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களிலும் லயித்து , ஆனந்தங்களையும் வசந்தங்களையும் ஓர் வெறும் மாயை போல அனுபவித்து வருகின்றன.
குண்டு , கில்லி, பம்பரம், போன்ற புழுதி சார்ந்த சந்தோஷங்களை கூட இந்தக்கால குழந்தைகள் இழந்து நிற்கின்ற சோகம் ...
பாரம்பரியமானவற்றை நம் போன்ற இளமை ரசனை உள்ளவர்கள் மறுபடி புதுப்பிக்க முனைவோம்.. அதுவே ஆரோக்யம். அதுவே குழந்தை இலக்கியம்.
நன்றி.மறுபடி சந்திப்போம்.
சுந்தரவடிவேலு.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
Nice!
ReplyDeleteவணக்கம் சுந்திரவடிவேலு
ReplyDeleteம்ம்ம்ம் ஆமாம் உண்மைதான், இப்போதைய பிள்ளைகள் கூட்டாய் விளையாடும் பல விளையாட்டுக்கள் மறைந்துவிட்டன
இராஜராஜன்