Friday, August 14, 2009

உன் நினைவிலேயே ....தொடர்ச்சி...


உன் மீதான எனது நேசம் இவ்வளவு ஆழமும் தெய்வீகமும் கொண்டிருப்பதை நீ உணராமல் போனதும், நான் வார்த்தைகளால் உணர்த்தாமல் போனதும் என் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்தென்றே சொல்வேன்.


ஒரு வேளை நீ உணர்ந்திருந்தும் கூட உணராதவள் போல நடித்தாயோ? நான் வார்த்தைகளால் உணர்த்தியிருந்தாலும் கூட அதனை நீ தவிர்த்து என் வருகையை உதாசீநித்து இருப்பாயோ?


இவையனைத்தும் இன்றைய சாவகாசங்களில் எனக்குத்தோன்றுகின்றன. ஆனால் மேற்கூறிய எந்த விபரீதங்களும் நிகழாமல் மௌனங்களிநூடே நாம் பிரிவதற்கான தருணங்கள் நேர்ந்தன.


அவ்விதம் பிரிய நேர்ந்த தருணங்கள் இன்றும் என்னுள் நிழாடிய வண்ணம் என்னை ஹிம்சித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு நாளே கூட உன்னைப்பாராவிடில் - எனது வீரியம் அவ்வளவையும் இழக்க நேர்ந்த அந்த நாட்களும்..... உன்னைப்பார்தே மாதங்களும் வருடங்களும் உருண்டோடி விட்ட இந்த நாட்களும்...- ஒப்பிட்டுப்பார்க்கவே பிரம்மிப்பேற்றுகிறது..


என்னை நீ சலனப்படுத்தினாயா தெளிவாக்கினாயா என்றே புரியாமல் தடுமாறுகிறேன்..


உன்னைத்தொலைத்ததைப் போலவே உனது முகவரியையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்..


உன் உருவை ஒத்த ஒருத்தியின் பின் சென்று அவளது இருப்பிடம் தெரிந்து கொண்டு வந்தேன் நேற்று.... எங்களுக்குள்ளாக மறுபடி உறவை எங்ஙனம் எவ்விதம் அடர்த்தி கொள்ள செய்வது என்கிற ஆராய்ச்சியில் திளைத்தவனாக திரும்பி வந்தேன்.


உன்னைப்போல அவள் என்னுடன் நாசுக்காக பேசி என்னை குளிர்விப்பாளா என்று சந்தேகித்தேன்..உமது பாங்கில் என்னை வரவேற்று சீதோஷணநிலைகளுக்குத்தகுந்தார் போல குடிக்கிற பானங்களைத் தருவிபபாளா என்பது கேள்விக்குரியதே. என் ரசனைகளை உன் போல உடனடியாக பாராட்டுகிற பாந்தம் அவளுக்கு இருக்குமோ?


-என்னை அவள் இன்னும் அனுமதிப்பதே அனுமானத்திலிருக்க இவ்விதமான

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...