Wednesday, August 12, 2009

காதல்...

காதலின் விரல்களைப்
பிடித்து குழந்தை போல
நடை பயின்ற காலங்கள் போய்
இன்று-
காதலைக் குழந்தையாக்கி
தாலாட்டுகிறேன்..
நமக்கெல்லாம் இளமை முதலிலும்
மூப்பு பிற்பாடாகவும் வருகிறது. ..
காதல் மட்டும் கடைசியில்
குழந்தையாகி விடுகிறது நம்
யாவருக்கும்..
அதன் யவ்வனங்களும்
மழலைமைகளும் நம்மையெல்லாம்
சுகந்தமானதோர் மூர்ச்சையில் ஆழ்த்தி
விடுகிறது..
வாழ்கையின் ஆதார ஸ்ருதியாகி
அபஸ்வரங்களைக் கூட
ஆனந்த ராகமாக்கி விடுகிறது காதல்..
அதன் மலர்ச்சி நமது எல்லா
வரட்சிகளையும் கேலியாக்கும்
வல்லன்மை கொண்டது..
ஆதலால் காதல் செய்வீர் யாவருமே..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...