Saturday, October 31, 2009

மீண்டும் ஏமாந்தது காக்கா...

வடை சுட்டு ஜீவனம் செய்து வந்த பாட்டி செத்துப்போனதற்கு காக்கையும் நரியும் வந்திருந்தன...
ஏமாற்றி தன் வடையை தந்திரமாக கவ்விச்சென்ற நரியை அதன் பிறகு இழவு வீட்டில் தான் பார்த்தது காகம்..
ஏன் அப்படி அன்று என் பசி குறித்த கவலை கூட அற்று தந்திரமாக பிடுங்கிச்சென்றாய் என்று நாக்கை பிடுங்கிக்கொள்வது போல நரியிடம் கேட்க வேண்டுமென்று காகம் யோசித்தது... ஆனால் இந்தக்கூட்டத்தில் அதைக்குறித்து கேட்பது அவ்வளவு நாகரீகமில்லை என்பதை உணர்ந்து .. பதினாறாம் நாள் காரியத்துக்கு வருகிற போது கேட்கலாம் என்று கேள்வியை ஒத்திவைத்தது காகம்.. காகத்தின் இந்த அனுமானத்தை எப்படியோ உணர்ந்து கொண்டது அந்தத்தந்திரக் கார நரி..

பதினாறாம் நாள் காரியத்திற்கு நரி வராதது காகத்துக்கு மறுபடி ஓர் பெரிய ஏமாற்றமாயிற்று...


சுந்தரவடிவேலு..

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...