Thursday, October 1, 2009

அவஸ்தை..

எந்த வசீகரங்களுமற்ற
கனவுகளுடன் உறக்கம்...
விழிப்பில் தான் எல்லாம் சூன்யம்
என்றால் உறக்கத்திலுமா?..

ஞாயிற்றுக்கிழமை
சாயங்காலம் ... சினிமா பார்க்கலாம்
என்று திரையரங்கு போனால்
அரங்கு நிறைவு...
பிளாக் டிக்கட் வாங்கிப்பார்க்க
வேண்டியதாயிற்று...

பிறகு ரெண்டொரு நாட்கள்
கழிந்து ஓர் இரவில் வந்த
கனவிலும் சினிமா பார்க்க
தியேட்டர் விரைகிறேன்...
பிளாக் கில் கூட டிக்கட்
கிடைக்காமல் வீடு திரும்புகிறேன்...!!


சுந்தரவடிவேலு.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...