Friday, October 23, 2009

என் கண்மணி...

நீ உன்
அழுகையை நிறுத்தினாலும்
நானென்
தாலாட்டை நிறுத்தமாட்டேன்..

உன்
பஞ்சுக்கன்னங்களில்
என் நாசியை
அழுத்தி-
உன் புன்னகைச்சூட்டின்
அருகாமையில்
குளிர் காய்வது
அலுக்காத சந்தோஷம்..

எட்டி எட்டி நீ
என்னை உதைத்தாலும்
உன் கால்களை
கட்டிக்கொண்டு
முத்தமிடுவதை
வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன்..

எனக்கு நீ
அருள் பாலிக்கவில்லை
என்றாலுமே கூட-
உன்னை பிரார்த்திப்பதை
மட்டும் என்னால் தவிர்க்கவே
முடியாது...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...