Sunday, October 4, 2009

சமத்துவம் என்பது வாழ்க்கையில் இல்லை..

ஜனங்கள் ஒன்று கூடுகிற திருவிழா கால கோவில்கள் ஆகட்டும் பிற கேளிக்கைகள் சார்ந்த இடங்கள் ஆகட்டும்..
மனிதக்கூட்டங்கள் எங்கு கூடுகிற காட்சியைப் பார்க்க நேர்கிற போதும் எனக்கு ஓர் விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கும்..
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெரிய சமத்துவ உணர்வுகள் எல்லாம் பீரிடவில்லை..
நாமெல்லாம் 'சாகப்போகிறவர்கள் என்பதில் மட்டுமே பிரம்மாண்டமானதோர் சமத்துவம் பொதிந்து கிடப்பதாகத் தெரிகிறது.

வாழ்கிற காலங்களில் அனேகமாக எல்லாருமே பாரபட்சங்களோடும் போட்டி பொறாமைகள் கொண்டும் , பிழைப்புக்கான போராட்டங்களோடும்
ஆடம்பரங்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவசரங்களும், அந்த சம காலத்தில் தன்னை சார்ந்தவர்களோ தமது நெருங்கிய நண்பர்களோ அவ்வித ஆடம்பரங்களை சுலபமாக அனுபவிக்கையில் நமக்குள் நேர்கிற ரசாயன மாறுதல்களும் அங்கலாய்ப்பான வேதனைகளும் வார்த்தைகளில் பிடிபடாது..
--ஆக, வாழ்க்கை என்பது சமத்துவத்திற்கு முரணாக இருப்பதையே யதார்த்தத்தில் தரிசிக்க முடிகிறது.
இதனை ஒப்பிடுகிற போது தான் மரணம் மிக யதார்த்தமான சமத்துவத்துடன் எனக்குப்படுகிறது...

என்றேனும் நாம் நடந்து செல்ல வாய்க்கையில் ஓர் அவசரம் நிமித்தம் டூ வீலரில் செல்பவர்களை drop செய்யச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்..பத்துக்கு ஒன்பது பேர்கள் "நான் அப்பிடி போறேன்.. இப்பிடி போறேன்.." என்று சொல்லி பறந்து விடுவார்கள். சிலரோ ஊமைகள் போல ஒன்றுமே பேசாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்..
இப்படியெல்லாம் சுட்டிக்காட்டுகிற .. சமுதாயத்தை குட்டிக்காட்டுகிற நானே இந்தத்தவறுகளை சுலபத்தில் ஓர் மனநிலையில் செய்து விடுவேன்.. நான் டிராப் செய்ய சொல்லிக் கேட்கையில் மதிக்காமல் போகிறவர்களின் மீதான கோபங்கள் ஒருபுறம்... அப்படி உதவி கேட்பவர்களே என்றேனும் எனக்கு உதவாமல் ஒதுங்கியிருப்பார்களோ என்கிற கற்பனை ஒருபுறம்....

--மேற்சொன்ன சின்ன உதாரணமே போதும், நம் வாழ்க்கையில் சமத்துவம் எப்படி வாழ்கிறது என்று...


சுந்தரவடிவேலு. திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...