Sunday, October 25, 2009

மலரினும் மெல்லிய...

பாலியல் குறித்து விஷயங்களை சேகரிக்க எந்த வயதிலும் சலிப்பதே இல்லை.. நாம் இந்த பிரபஞ்சத்தில் அடி எடுத்து வைத்ததே அந்தப் புணர்ச்சியின் நிமித்தம் என்பதாலோ என்னவோ, பிரத்யேகமாக அந்த விஷயத்தில் அதீத கவனத்தை இயல்பாகவே செலுத்தப் பழகிக்கொண்டோம்...

ஆனபோதிலும் அவைகளைப்பற்றி விவாதிக்கையில் நாசுக்கு தவறாமல் சற்று இங்கிதம் தொனிக்க பரிமாறுவதே ஆரோக்யமான போக்காகும்.. அல்லாமல் யதர்ர்த்தமாக சொல்கிறோம் என்கிற பாணியில் பேசினோமே யானால் அது ஆபாசமாகவும் விபரீதமாகவும், சொல்கிற நபருக்கே குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் மாறி விடக்கூடும்...

அவை குறித்து ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன.. தொலைகாட்சி அலைவரிசைகள் உள்ளன. அதற்கென நேரம் ஒதுக்கி கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.. எந்தக்கேள்விகள் ஆனாலும் ஒளிவு மறைவு அற்று கேட்கிறார்கள்.. பதிலும் பக்காவாக சொல்கிறார்கள்.. அப்படியிருக்க, இந்த ப்ளாகில் நானேதும் புதிதாக சொல்லிவிடப்போவதில்லை..

பாலியல் குறித்து அது சார்ந்த எவ்வளவோ நிபுணர்கள் படம் போட்டுக்காட்டுகிற இந்த சூழ்நிலையில் நான் இங்கே சொல்ல ஒன்றுமில்லை.. நானும் அவை குறித்து எவரேனும் சொல்ல, வாய் பிளந்து கேட்கவே ஆயத்தமாயுள்ளேன் என்பதால் .... நான் ஏதேனும் சொல்ல வருகிறேனோ என்று வாய் திறந்து எவரேனும் இருப்பீர்களேயானால் ....

நெல்லை ஹல்வாவைத்தான் திணிக்க வேண்டும்...



சுந்தரவடிவேலு, திருப்பூர்.


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...