ஏதேனும் கமெண்ட்ஸ் வரும் என்று எதிர்பார்த்தால் ஒன்றையும் காணோம்.. கமெண்ட்ஸ் டானிக் மாதிரி.. எழுதுபவர்களுக்கு...
ஆனபோதிலும் அதற்கான தகுதி பெறாத எழுத்துக்களுக்காக கமெண்ட்ஸ்-ஐ எதிர் பார்த்துக் கிடப்பது அறிவீனம்...
எவ்வளவோ பேர்கள் படிக்கலாம்.. ப்ச். என்னத்தைப்போய் விமர்சிப்பது என்கிற சலிப்பில் கூடப்போயிருக்கலாம்... அல்லது.. இவன் அறுத்துத் தள்ளுவான். என்று ஒதுங்கிப்போயிருக்கலாம்... இப்படி ஏதாவது நிகழலாம்..
இதற்கெல்லாம் சலிக்காமல் கல்லுளி மங்கன் போல எதையேனும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகள் வகுத்துக்கொண்டேன் என்றாலும் இந்தப் பாழாய்ப் போன மனசு இருக்கே... எவரேனும் ஏதேனும் என் கருத்துக்கள் குறித்து பிரலாபித்து இருக்க மாட்டார்களா என்கிற நப்பாசை.... அன்றாடம் கமெண்ட்ஸ் காலத்தில் சற்று மேய்வேன்.. ஜீரோ கமெண்ட்ஸ் என்று இருப்பதைப்பார்த்து .."இன்னாங்கடா இது.. நம்ம காவியத்தைப் படிச்சுட்டு நம்ம ரசிகப்பெருமக்கா கண்டுக்காம இருக்காஹலே.."ன்னு ஒரு சடவு....
...இதுக்கெல்லாம் அசந்தராத வாத்தியாரே.. சும்மா எதையாச்சும் கச்சா முச்சா ன்னு கிறுக்கிக்கினே கெட... அதெல்லாம் எதனாச்சும் ஸொல்லுவாஹ.. சொல்லாட்டியும் தான் என்ன.. நீ பாட்டுக்கு எய்திக்கினே கெட ...ன்னு அசரீரி ஒன்னு பொலம்புது நைனா...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment