Sunday, October 11, 2009

ரசனைகள்..

காதல் என்கிற
புனிதம் துவங்கும்
பொழுதே
காமத்துக்கான
அடிக்கல்லும் சேர்ந்தே
நாட்டப்படுகிறது....

புணர்தல்
நிகழ்கிற தருணம்
வரைக்கும்
காதல் - தன்
புனிதத்துவத்தை
இழக்காமலே தான்
இருக்கிறது...

காமமும்
புனிதம் என்றும்
அது மலரினும் மெல்லியது
என்றும் உணரப்படுவதற்கு
அபரிமித ரசனை தேவைப்படுகிறது...

ரசனையற்ற புணர்தல்கள்
சலிப்பை ஏற்படுத்தும்
நாளடைவில்...!
பிறகு...
காணாமல் போயிருக்கும்
காதலும் காமமும்...!!

சுந்தரவடிவேலு

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...