Sunday, November 1, 2009

திருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...

வருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி...
சொன்னது சொன்னது போலவே நடக்கிறது.. பிரச்சினை என்னவானாலும் அதற்கு அற்புதமான தீர்வுகளை அள்ளி வழங்குகிறார் அந்தக்கருப்பராயன் கோவில் பூசாரி..
நினைத்த காரியம் பலித்து விட்டால் மீண்டும் அதே கோவில் சென்று நாம் விரும்பிய காணிக்கைகளை பரிசளித்து விட்டு வரலாம்...
மேற்சொன்ன யாவும் செவி வழி செய்திகள்.. நாமும் தான் பிறந்த நாள் தொட்டு பிரச்சினைகளுடன் தானே இருக்கிறோம்.. ஒரு முறை போய்விட்டு வருவோமே என்கிற விதமாக ரெண்டொரு நாட்கள் முன்னர் சென்று வந்தேன்...

சில இடங்களில் ஆன்மிகம் எவ்வளவு கேவலப்பட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு பெரிய உதாரணமாய் இருந்தது அந்த இடமும் அங்கு நிகழ்கிற கூத்துக்களும்..

குறி சொல்கிற அந்தப்பூசாரி சரமாரியாக பீர் பிராந்தி ஒயின் ரம் என்று நம் முன்னாடியே ஊற்றி ஊற்றி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே ராவாக அடிக்கிறார்.. போதையில் பிதற்ற ஆரம்பிக்கிறார்... குறி சொல்ல அவர் தேர்ந்தெடுக்கிற நபர் படுகிற அனைத்த துன்பங்களையும் சொல்கிறார்.. அவைகள் கூடிய விரைவில் கருப்பராயனால் தீர்த்து வைக்கப்படும் என்கிறார். குறி கேட்ட அந்த நபர் அப்படியே புல்லரித்துப்போய் விடுகிறார்.
அங்கே வருகிற முக்கால்வாசி பக்தர்கள் நேர்த்திக்கடனாக அனைத்து வகை மதுபானங்களையும் பரிசாக அளிக்கின்றனர்.. அந்தப்பூசாரியும் யாவற்றையும் பாக் செய்து மீண்டும் ஒயின் கடைகளுக்கே சப்ளை செய்வதாகக்கேள்வி... அது போக பணம் .. தங்கம் வெள்ளி என்று வேறு பரிசளிக்கிறார்கள் மக்கள்...

ஒரு வேளை சோற்றை உலையில் கொதிக்க வைக்கவே எவ்வளவோ பேர்கள் படாத பாடு படுகிற இந்தக்கால கட்டங்களில் இப்படி மிதப்பாக சுலபத்தில் லட்சங்களும் கோடிகளும் குவிக்கிற புத்திசாலிகள் புற்றீசல்கள் போல முளைத்த வண்ணம் தான் உள்ளனர்...

இந்தத் திறன்கள் நம் போன்ற எளிய மக்களுக்கு கை கூடுவதில்லை... ஆனால், இப்படியான பித்தலாட்ட நபர்களிடம் ஏமாந்து நாசமாய் போவதற்கு மட்டும் கை கூடுகிறது..

மாடாக உழைக்கத்தெரிந்தவர்கள் கூட இந்த மாதிரியான சோம்பேறிகளிடம் சிக்கி சீரழிகிற கொடுமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இங்கு சென்று திரும்பியது நரத்திலிருந்து மீண்டது போல உள்ளது.. நாம் வந்து வாழ்கிற இடம் சொர்க்கம் இல்லை என்றாலுமே கூட .. இந்த மாதிரியான அனாசாரமான இடங்களிலிருந்து திரும்பி வருகையில் நம் இடம் கூட சொர்க்கமாகத்தான் தெரிகிறது...



சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...