Monday, November 16, 2009

குழந்தையின் வருகை..

உன் ரௌத்திரம்
என்னை குதூகலப்படுத்தும்..
என் முடியை
நீ பொசுக்குகிற சுகம்
என் தலைவலிகளைக்கூட
சொஸ்தமாக்கும்...

பசியில் நீ வீறிடுவதை
சற்று ரசிப்பேன்...
கையில் பால்புட்டியை
வைத்துக்கொண்டே...
உன்னை அழ வைப்பது
நோக்கமன்று.,
உன் சாரீரம் வலுவடைய
வேண்டும் என்கிற உத்தி அது...

உன் மௌனமான புன்னகை
ஓர் அழகென்றால் - உன்
முணகல் நிறைந்த
புன்முறுவல் ஓர் நேர்த்தியான
சங்கீதம்...

-செத்துக்கிடந்த
என் வாழ்க்கை.. இன்று
உயிர்த்தீயில் ஜொலிக்கிறது!
இற்றுக்கிடந்த என் கனவுகள்..
இன்று இறுகிப்போய்
வடிவம் பெற்றிருக்கின்றன..!!

வீடு வரவே சலிப்புணர்ந்தேன்
அன்று..
இன்று வெளியேற சலிப்புணர்கிறேன்
வீட்டை விட்டு..!
உன் வருகை-
எனக்குள் நிகழ்த்திய இந்த
மாற்றங்களை ...
நீர்வீழ்ச்சியில் குளிப்பதாக
உணர வைக்கின்றன..!!


சுந்தரவடிவேலு...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...