Wednesday, August 22, 2012

நழுவும் சந்தர்ப்பங்கள்.

அனேக சமயங்களில் பேருந்து நிறுத்தங்களில் நாம் எதிர்பார்த்துக் கிடக்கிற பேருந்து மாத்திரம் சொல்லி வைத்தாற்போல வருவது காணோம்..
 நின்று நின்று மண்டை காய்ந்து நடை கட்டலாம் என்று முடிவெடுக்கையில் அதே நிறுத்தத்திற்கு ஒரு நல்ல பிகர் வந்து நிற்கிறது ..
அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுகையில், வேக வேகமாக வந்து தொலைகிறது சற்று முன்னர் நாம் எதிர்பார்த்த பேருந்து...
ஆனால் அந்த பிகர் நிற்பது மற்றொரு பஸ்ஸுக்காக.. நமக்கென்று வந்த பஸ்ஸில் ஏறச்சொல்லி முட்டாள்தனமாக நம்  கண்கள் பணிக்கின்றன... ஐயோ.
ஓர் கேலிப் புன்னகை செய்கிறாள் அவள்...அதனை காதல் என்று விவஸ்தை இல்லாமல் கற்பனை செய்து அவஸ்தை கொள்கிறது நம் மனது.
-காதலிப்பாள் என்கிற உத்தரவாதம் இருக்குமாயின், நிச்சயம் இறங்கி அவளது பேருந்தில் பயணிக்க ஆட்சேபணை என்ன?
"எங்கடா வெளிய போன மகனைக் காணோமே?" என்று அம்மா தவிப்பதோ, "இதென்னடா வெளிய போன புருஷனைக் காணோம்" என்று பொண்டாட்டி பயப்பதோ பொருட்டற்ற விஷயங்களாகி விடாதோ அவள் நம்மை வரவேற்கையில்??
சபலங்களினின்று மீள்வதென்பது விழித்துக் கொண்டே காண்கிற கனா...
சபலங்கலினுள் சரிந்து புதையுண்டு மூர்ச்சை ஆவதே யதார்த்தமிங்கே..!!

காலம்பர கொஞ்சம் வாக்கிங் போலாம்னு வெளிய கெளம்புனா கொறஞ்சது ரெண்டு மூணு பேராச்சும் "வீட்ல டிராப் பன்னட்டுங்களா?" ன்னு கேப்பாங்க.
"இல்ல சார்.. நம்ம ஹெல்த் ப்ராப்லத்துக்காக வாக் பண்றேன்.. நோ தாங்க்ஸ்.." என்று  பிதற்ற நேர்கிறது..
எப்பாச்சும் நல்லா மண்டை காயற வெயிலில டூ வீலரோ பேருந்தோ அற்ற ஒரு சூழ்நிலையில்  அப்படி கிராஸ் பண்ற யாரையாச்சும் டிராப் பண்ண சொன்னா கூட, "சாரி சார். நான் அப்டி திரும்பறேன்.. இப்டி திரும்பறேன்.." என்று சொல்லியவண்ணம்  நேராக சென்று நம்மைக் கடுப்படிப்பர்... சிலரோ, ம்ஹும் .. ஒரு ரெஸ்பான்சும் இல்லாமல் போயிக்கினே இருப்பாங்க... போங்கடா போங்க.. எங்கனாச்சும் போயி இடிச்சு வுழுங்கோ ன்னு மௌனமா சபிக்கிற அளவு டென்ஷன்  செய்வாங்க..
நாமளும் வண்டியில போறபோது எவனாச்சும் டிராப் பண்ண சொல்லி கையைக் காட்டினா  அவ்ளோ நம்பிக்கையா நிறுத்தறமா என்ன... கேள்விப் பட்டிருக்கோம்.. பின்னாடி ஒக்காந்துக்கிட்டே எதாச்சும் விஷமம் செய்வாங்க... அப்டி இப்டின்னு... அதுக்கு பயந்துட்டு பறந்துடறோம் ...
அப்டித்தானே எல்லாரும்?.. ஆனா நமக்கு நெனப்பு என்னன்னா, நாம மட்டும் தான் பொறுப்பா திங்க் பண்ணி வேணான்னு முடிவெடுக்கறோம் , மத்தவங்க எல்லாம் பொறுப்பே இல்லாம நம்மை avoid பண்றாங்கன்னு முடிவெடுக்கறோம்...
எல்லா விஷயங்களுமே இப்படித்தான் .. அவுங்க அவுங்க அவுங்களோட சவுகரியத்துக்கு  ஒரு முடிவுக்கு வந்திடுவாங்க.. எல்லாருமே தன்னோட தீர்மானமே  சரியானதுங்கற முடிவுக்கு சுலபமா வந்துடறாங்க.. இது எல்லாருக்குமே உள்ள இயல்பான  பலவீனம்.. 

1 comment:

  1. உண்மை தான் சார்... நல்லதொரு சிந்தனை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...