Saturday, August 18, 2012

ஆகஸ்ட் பதினஞ்சு..

சுதந்திர தின வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன.. மின்னஞ்சல்களில்

எனக்கதில் உடன்பாடு உள்ளதெனிலும் ஓர் வகை ஆதங்கமும் உண்டு அதனை வெளிப்படுத்தும் விதமாக நான் கொஞ்சம் நீண்டு ஓர் அஞ்சல் அனுப்ப நேர்ந்தது அதனை எனது  பிளாகிலும் வெளியிட விரும்புகிறேன்


.வாழ்த்துக்கள் பரிமாறி பிரத்யேகமாக சுதந்திரத்தை யாரும் இங்கே அனுபவிப்பது போல தெரியவில்லை... தீபாவளி போலவோ பொங்கல் போலவோ ஒரே நாள் கொண்டாட்டமாக இங்கே சுதந்திரம் இல்லை.. இது அன்றாடம் நிகழ்கிற பேரின்பமாக நம்மில் படிந்துள்ளது... எத்தனை பேர் இந்தப் புனிதமான விலைமதிப்பற்ற சுதந்திரத்தை பிரயோகிக்கிறார்கள், மற்றும் துஷ்ப்ரயோகிக்கிறார்கள் என்பதே இங்கே கவனிக்கப் படவேண்டிய, தவறுகள் காண்பின் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள் ஆகும்... 
பொது இடங்களில் வெற்றிலை சிகப்பெச்சிலைத் துப்புகிற, நினைத்த இடங்களிலும் குப்பை கொட்டுகிற, காறித் துப்புகிற, சளியை மூக்கிலிருந்து பருச்சென்று சிந்துகிற, திடீரென்று பேருந்து ஜன்னலில் தலையை நீட்டி வாந்தி எடுக்கிற, வெட்டவெளியில் மலஜலம் கழிக்கிற, .. இன்னும் இப்படி இத்யாதி துஷ்ப்ரயோக சுதந்திரங்களை நாமெல்லாம் விரும்பாவிட்டாலும் அன்றாடம் அருவருப்போடு தரிசித்து முகம் சுழிக்கிற சூழல் நிகழ்ந்த வண்ணமே தான் உள்ளது..
இவை போக, வாசலுக்கு வந்தே தான் பல் துலக்குகிற, அந்த பேஸ்ட் வெள்ளையை நினைத்த இடங்களில் துப்பி சிதறல் கோலம் போட்டு ரசிக்கிற, துவைப்பதற்கென்று வெளியே கல் போட்டு சோப்பு நுரையை வீதியில் உலவ விடுகிற, ... இப்படி இவையெல்லாம் ஓர் வித சுதந்திரம்... 
யு டியூபில் வெளி நாடுகளின் தூய்மையை கவனியுங்கள்... மக்களின் சுகாதார மேன்மையை கண்டு வியப்பீர்கள்... லட்சம் பேர் கூடுகிற ஓர் இடத்தில் கூட அவசரம் ஆர்ப்பரிப்பில்லாத தெளிவில் செயல்படுகிறார்கள்... ஆனால், நமது கோவில்களில் கூட ஓர் இருபது பேர் கூடியிருந்தாலுமே கூட .. பிரசாத விநியோகம் என்றால் , குப்பைத் தொட்டியில் எச்சிலை விழுந்ததும் உர்ரென்று முகங்களை வைத்துக் கொண்டு பிராண்டுகிற நாய்களுக்கு ஒப்பாக நமது மக்கள் தங்களையே கேவலப் படுத்திக் கொள்கிறார்கள்... 
சுகாதாரம் குறித்த பிரக்ஞை அற்ற எவரும் சுதந்திர வாழ்த்துக்களைப் பரிமாறுகிற யோக்கியதை அற்றவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து... நன்றி..

2 comments:

  1. அப்படிச் சொல்லுங்க... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Dear Dindigul Danapal sir,

      I really want to thank you for your kind comments for each of my blog postings. THANK YOU VERY MUCH SIR..

      Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...