Monday, August 20, 2012

நடைமுறை விபரீதங்கள்..

ஆடி வெள்ளிகளுக்கு அமோக கூட்டம் மொய்த்தன கோவில்களில்... அதுவும் பிரத்யேகமாக அம்மன் கோவில்களில்... மாரியம்மன் கோவில்கள் , பத்ரகாளியம்மன் கோவிலகள் , இத்யாதி இத்யாதி அம்மன்கள்..

புடை சூழ்கிற பெண்களை தரிசிக்க புடை சூழ்கிற ஆண்கள்... அனேக பெண்கள் கற்சிலை அம்மன்களை தரிசிக்கக் குழுமுகையில் , ஆண்களோ நடமாடும் அம்மன்களை தரிசிக்க திரள்கிறார்கள்..

எங்கெங்கிலும் நிகழ்கிற யதார்த்தம் இதுவே என்ற போதிலும் ... என்னவோ ஆண்கள் இனமும் ஆடி வெள்ளி அம்மன்கள் மீது பிரம்மாத அக்கறை செலுத்துவது போன்ற பாவ்லா காட்டினால், அதை நம்புவது அப்பாவி மக்கள் மட்டுமே.

நான் ஓர் ஆணாக இருந்து கொண்டு ஆண்கள் மீது இப்படி ஓர் சாடல் நிகழ்த்துவது நியாயமற்ற செயல் என்றும், இது மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றும் கூக்குரல் எழுப்புகிறவர்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி சிரத்தை உள்ள ஆண்கள் என்று சான்றிதழ் வழங்க முடியும்... இதனை ஆமென்று மெளனமாக ஆமோதித்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கிற சபல மனிதர்களை எனது மனக்கண் முன்பு நான் அனுமானித்துக் கொள்கிறேன்... அவர்கள் நிச்சயம் எனது கருத்துக்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் தரப் போவதில்லை என்பதை என் மனதறியும்..

கோவில்கள் என்று மட்டுமில்லை... எல்லா கும்பல் கூடுகிற பிராந்தியங்களிலும் இதே  கதை தான் என்பதை என்னால் அடித்து சொல்லமுடியும்... இன்னும் சொல்லப் போனால் இப்படி எல்லா பக்கங்களும் கும்பல் திரளக் காரணமே  எதிரினங்களின் வருகை நிமித்தமே.. வேண்டுமானால் ஆண்களுக்கென்று தனியாகவும் பெண்களுக்கென்று தனியாகவும்  எல்லா விஷயங்களிலும் அனுமதிகள் வழங்கட்டும்... தேவையானவர்களும் உண்மையானவர்களுமே அந்த இடத்தில் குழுமக் கூடும்.. தேவையற்ற ஆண்களோ பெண்களோ அங்கே இடம் பெறுவதற்கான வாய்ப்பு  சற்றும் இல்லை என்பதை நான் அழுத்தி சொல்வேன்..

ஆனால் லேடீஸ் ஒன்லி பஸ் என்பதோ ஜென்ட்ஸ் ஒன்லி பஸ் என்பதோ கூட நடைமுறைக்கு சிக்கலான விஷயங்களாகவே இருந்துவருகிறது..

மற்றொன்று... இந்த டூ வீலர் நன்கு ஓட்டிப் பழகி விடுகிற கல்லூரி செல்கிற டீன் ஏஜ்  பெண்கள் ஆகட்டும், ஓர் நடுத்தர வயதுப் பெண்மணி ஆகட்டும், மிக வேகமாக செல்கிறார்கள்... சிலர் சுடி அணிந்து கொண்டு காற்றில் சால் மிதக்கப் பயணிப்பதைப் பார்த்தால், பொறுப்பான எவருக்குமே  ஓர் டென்ஷன் வந்து விடும்... என்ன வேகம் அது ? எதற்கு அந்த வேகம்?.. இது போதாதென்று தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் செல்போனை செருகிக் கொண்டு ஏதோ பேசிய வண்ணம் பயணித்து ஒழுங்கான முறையில் டிரைவ் செய்கிற ஆண்களையும் கீழே சாய்த்து விடுவார்கள்... ஆனால் கடைசியில் தர்மடி வாங்குவது அந்த அப்பாவி ஆணே ...! இவர்களும் தாங்கள் என்னவோ சீராக ஓட்டி வந்தது போலவும் , அந்த ஆள் தான் வேடிக்கை பார்த்துவிட்டு தன மீது இடித்து விட்டதாகப் புகார் கொடுத்து சிக்க விட்டு விடுவார்கள்..

இன்னும் சில பெண்கள்.. வீட்டில் இருக்கிற வரை ஒழுங்காக இருந்திருப்பார்கள்.. இந்த ஸ்கூட்டி ஓட்டிப் பழகியதும், எடுத்துக் கொண்டு எங்காவது ஓர் ஓரமாக ஒதுங்கி  ஒய்யாரமாக மணிக்கணக்கில் எவருடனோ பேசிக் கொண்டிருப்பதை எல்லாருமே பார்த்திருக்கலாம்... அந்தப் பெண்ணுடைய கணவனோ, தனது மனைவி அற்புதமாக வண்டி ஓட்டுவாள், பள்ளி சென்ற குழந்தைகளை நாம் இனி ட்ராப் செய்யத் தேவை இல்லை, என்கிற நிம்மதிப் பெருமூச்சோடு  இருப்பான்... ஆனால் இங்கே அம்மணி தனது நண்பர்களிடம் கடலை போட்டுக் கொண்டு பொழுது ஓட்டுவாள். வண்டியை ஒரு மரத்து நிழலில் நிறுத்தி அதிலே உட்கார்ந்த வண்ணம்..

இந்த அபாண்ட குற்றச்சாட்டை எல்லா அப்பாவிப் பெண்கள் மீதும் திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை...
சிலர் இப்படி சீர் கெட்டுத் திரிகிறார்கள் என்பது நிதர்சன உண்மை என்பதை நல்ல பெண்களே ஆமோதிப்பர் என்று நம்புகிறேன்..

இதே தவறுகளை ஆண்களும் மிக யதார்த்தமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்... பெண்கள் செய்வது பிரத்யேகமாகத் தெரிகிறது... ஆண்கள் செய்வது , ஓர் பொது இடத்தில் "தம்" அடிப்பது போல போய் விடுகிறது.. பெண்கள் அவ்விதம் புகைத்தால் வினோதமாகத் தெரியுமல்லவா? அந்த மாதிரி..














2 comments:

  1. நடைமுறை உண்மைகள்... நல்ல அலசல்...

    விபரீதங்கள் ஆகாமல் இருந்தால் நல்லது...

    முடிவில் எளிதான ஒரு உதாரணத்தோடு முடித்துள்ளீர்கள்... நன்றி சார்...

    ReplyDelete
  2. thanks for yr kind comment mr.danapalan sir..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...