Saturday, July 25, 2015

படத்தைப் பார்த்து கதை சொல்க.. .. .. !


ன்பே ராசா.. ஒனக்காகத் தாண்டா இந்தப் பாலைவெளியில வெய்யில்ல குப்புறப் படுத்துட்டு கூலிங் கிளாஸோட யோசிச்சிட்டு இருக்கேன்.. நீ எப்ப வருவே இந்தப் பூவை எப்ப தூக்கிட்டு போகப் போறேன்னு தவியா தவிச்சுக்கிட்டு கெடக்கேண்டா செல்லம்..
நீ இல்லாம இந்தத் தனிமைல வாழுறது ரெம்பச் சிரமண்டா கண்ணு.. புரிஞ்சுக்க.. இந்த தேவதைய தனியா உட்டுப்பிட்டு எப்பட்றா ஒனக்கு போக மனசு வந்திச்சு? நான் ஆம்பளையா இருந்து, எனக்கு இப்புடி ஒரு சிட்டு கெடச்சுதுன்னா அப்டியே அலேக்கா தூக்கிட்டு அந்த வானத்துல பறந்துட்டு இருப்பேன் இந்நேரம்.. நீ என்னடான்னா ..?
உன்னோட ஏக்கத்துல உடலு கருத்து , இந்த வாழ்க்க வெறுத்து, துக்கம் பருத்து, தவிக்குதுடா தென்னங்குருத்து..
போதும்  உன்னோட கருத்து.. இத்தோட இத நிறுத்து" ன்னு நீ சொல்றது இந்தக் குயிலுக்குக் கேக்காம  இல்லே..

ஒன்னே தனியா விட்டுப் பிட்டு வந்தது குத்தம் தான் புள்ள.. . ஒத்துக்கறேன்.. அத நெனச்சு தானே ராவா இந்த பீரை ஊத்தி ஊத்தி நெதமும் ஊறுகா கூட இல்லாம,  ஊத்திக்கிட்டே கெடக்கேன்.. போதும் புள்ள நீ குப்புறப் படுத்துக் கெடக்கறது.. மல்லாக்கப் படு தாயி , அப்டியே அந்தக் கூலிங் கிளாஸை ஸ்டைலா மாட்டிக்கிட்டு வானத்தை ஒரு சைன்டிஸ்ட் மாதிரி லுக்கு விட்டின்னா எடுப்பா இருக்கும் மயிலு..     
கவ்லய வுடு கண்ணு.. இங்கிட்டு ஒன் நெனப்புல நான் படுக்க முடியாம நின்னுக்கிட்டு அல்லாடறேன்.. நீ அங்குட்டு என் நெனப்புல எந்திரிக்க முடியாம குப்புறக் கெடக்குறே.. என்னாடா செல்லம் விதி இது?
                                                                                                                                                                                                                   
ஐயோ நிக்க முடியல புள்ள.. இப்ப ஒன்ன நெனச்சுட்டு வோட்கா சாப்பிடறேன்.. பீரு ரொம்ப போரு கண்ணு.. டாஸ்மாக் இல்லாமலே சரக்கு கைக்கு சும்மா சரக்கு சரக்குன்னு வருதுன்னா அதுக்கு காரணமே நீயும் உன்னோட நெனப்பும் தாண்டி ராசாத்தி. நீ பக்கம் இருந்தா கூட இவ்ளோ ஜில்லுன்னு ஒடனே ஒடனே கெடைக்கும்மான்னு டவுட்டு.. தள்ளியே கெடடி ராசாத்தி.. அடுத்ததா ஒயினு விஸ்கி எல்லாம் வருதான்னு பார்ப்பம்.. 


அட போடா உங்கொய்யாலெ .. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. சரக்குக்காக இந்தப் பூங்குயிலையே வேணான்றியே .. உன்னயெல்லாம் உசுரோட பொதைக்கனுண்டா இத்த நாயி.. நீ அங்கியே எக்கேடோ கெடு  .. என்னெ ஆள வுடு .. எனக்கொரு மவராசன் ஆப்பீஸ் போகச் சொல்லி ஹேண்ட் பேக் கொடுத்திருக்காரு.. அங்குட்டு ஒரு பயல மடக்கிப் புடறேன். என்னடா குப்புறக் கெடந்தவ ஒருக்களிச்சு  படுத்திருக்கான்னு தானே பார்க்கறே?.. 



இவுக ஸ்டோரிய படிச்சா சிரிப்பு சிரிப்பா வருது, ஏன் புள்ளே?.. நம்மள மாதிரி அன்யோன்யமா இருக்கத் தெரியாத சென்மங்களா இருக்கே.. சரி சரி வாயக் கொப்புளிச்சுட்டு  பெட்டுக்கு வா.. லிப்லாக்ல சித்த நாழி கெடப்போம்.. ஹிஹி.. 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...