Thursday, July 9, 2015

HEL(L) MET...

ஹெல்மெட் பெரிய தலைவலியாக எல்லாருக்கும் மாறி விட்டிருக்கிறது..
எவனோ லூஸுத் தனமாக கண் மண் தெரியாமல் ஸ்பீடிங் போய் விழுந்து சாவதற்கு மொப்பெட்டில் 30 கூடப் போகாத நோஞ்சான் ஓட்டுனர்களும் அணிந்து தொலைய வேண்டிய இக்கட்டிற்கு ஆளாகி அலறிக் கொண்டிருக்கிறார்கள்..

கோவில் பூங்கா என்று குடும்ப சகிதமாகப் போகிற எல்லா குடும்பங்களிலும் மனைவிமார்கள் வண்டியை விட்டு கீழே இறங்கிய நொடியிலிருந்து  நடமாடும் ஹெல்மெட் ஹேங்கர்களாக வலம் வருவதைப் பார்க்கையில் இன்னும் தமாஷாக இருக்கிறது..

கணவர்கள் வண்டியில் தைரியமாக மாட்டிவிட்டு வருவதாக சொன்னாலும் அதனை ஏற்காமல், பூக்கூடை போன்று கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தால்.. ஒருமாதிரி சங்கடமாகக் கூட உள்ளது.. சமுதாயத்தின் மீதான பெண்களின் சந்தேகப் பார்வை ஏற்படுத்துகிற சங்கடமது..

ஹெல்மெட் லாக்கர்களை வண்டிகளில் பொருத்துகிற பொறுமை மிக சிலருக்கே உள்ளது.. அரசாங்கம் அதையாவது இலவசமாக செய்து கொடுத்தால் புண்ணியமாகப் போகும்..

இந்தக் கூத்து இன்னும் எத்தனை நாட்களோ என்கிற  சந்தேகம் சில தீர்க்க தரிசிகளுக்கு உதிக்கிறது.. இந்தமுறை சட்டம் மிகக் கடுமையாக செயலாற்றும் என்கிற வதந்தி வேறு பலமாக உலவுகிறது..

துவக்கத்தில் எல்லா இழவுகளும் கொஞ்சம் வருத்தமளிக்கும்.., அழுகாச்சு மூட்டும்.. அப்புறம் போகப் போக "இந்தக் கருமாந்திரம்" சகஜாமகி விடுமென்பதே நிதரிசன உண்மை.... இது,  ஹெல்மெட் விஷயத்தில் மாத்திரம் அல்ல, யாவற்றுக்கும் பொருந்தும்..

ஹெல்மெட் அணிய சங்கடப் படுகிற ஒவ்வொரு நபருக்கும் ஒரு சஸ்பென்ஸ் ட்ரீட்மென்ட்  கொடுக்க வேண்டும் என்பது எனது அவா.. அதாகப் பட்டது, அந்த நபர் வண்டியில் கடந்து போகும் போது , நச்சென்று அவரின் மண்டையில் கல்லிலோ, அல்லது வேறொரு கன பரிமாணமான ஒரு வஸ்துவிலோ "ணங் "கென்று  ஒரு அடியை இறக்கி.., மனிதர் ஆடிப்போய் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றி சுழற்றி அதன் சேதாரத்தை கவனித்து விடவேண்டும்.. அந்த அடி இந்நேரம் வெறும் மண்டையில் பட்டிருக்கும் பட்சத்தில், நிச்சயம் க்ளோஸ் ஆகியிருப்போம் என்கிற ஒரு ஊர்ஜிதத்தைக் கொணர்ந்து .. சாகிற வரைக்கும் ஹெல்மெட்டும் கையுமாக இருக்கும்படி நிலைமை மாறிவிடும்.. ஓட்டுவதற்கு டூவீலரே இல்லை என்றாலும் கூட ஹெல்மெட்டை மண்டையிலிருந்து இறக்க முடியாத அளவுக்கு மனநல பாதிப்பை  ஏற்படுத்தக் கூடும்.. ஹிஹி..  

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...