Monday, July 20, 2015

ஹைக்குப் பயித்தியம்..

ஒரு முரட்டுச்
சோம்பேறிக் கவிஞனின்
கண்டுபிடிப்பு...

மூன்று வரி தாண்டி
நான்காம் வரிக்குத்
திணறுகிறவனின் சாக்காடு..

சுருங்கச் சொல்லி
விளங்க வைக்க மெனக்கெடுகிற
புத்திசாலித்தனம்..

மயிலேறி உலகை வலம் வரும்
முருகனை கேலி பேசுகிற
விநாயகன்..

ஆயுதங்கள் வைத்துக் கொண்டே
அஹிம்சை போதிக்கிற
காந்திகள்..

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...