Wednesday, July 15, 2015

கபடக்காரி..

காதலித்தது 
நாமெனிலும் 
காதலில் ஜெயித்தது நீ.
தோற்றது நான்.. 

என் இதயம் 
உன்னைக் கவர்ந்ததாக 
நம்பியிருந்தேன்.. 
என் சொந்த வீடும் 
சொகுசுக் காரும் 
என்பதை பின்னர் அறிந்தேன்.. 

என்னை மயக்கிய 
உனது நளினத்தை 
மலினமென்று 
இன்றுணர்ந்து உடைகிறேன்.. 

அன்றைய எனது 
அறியாமைகளுக்கான  
இன்றைய வெட்கங்கள் 
பெரு நோயாக இம்சிக்கிறது.. 

ஆனாலும் கூட 
உனது நடிப்பை 
உண்மை என்று நம்பிய 
அந்த நாட்கள் 
எனக்கு மிக 
ரம்மியமானவையே..!

ஆனால் 
அன்றும் இன்றும் 
கபடங்களினூடே 
காதலின் உன்னதங்களை 
உணராமலே வாழ்கிற 
உமது சாபக் கேடுகள் 
குறித்து எனக்கும் 
உன்னை தோற்கடித்த 
உணர்விருக்கிறது.. 

இருப்பினும் 
இந்த வெற்றி என்னில் 
ஒருவித அசூயை 
பரப்புவதாகவே  உள்ளது..!!

1 comment:

  1. அந்த தோல்வி கூட நமக்கு ஒருவித சுமையே...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...