Wednesday, July 22, 2015

கரைதல்..



ன்னில் ஊடுருவும் 
சாத்யக் கூறுகளை யோசிக்கிறேன்..
என்னிலேயே பிறந்தநாள் தொட்டு 
இருந்திருந்து அலுத்துப் போயிற்று 
எனக்கு.. 

உமது அவயவத்தின் ஏதோ 
ஒரு பிராந்தியமாக என்னால் 
வீற்றிருக்க முடியாமற்போனது  
எமது துரதிர்ஷ்டம் ...

கண்கள் மாதிரி உடனே 
ஸ்பரிசிக்கிற யோக்யதை 
கைகளுக்குக் கிடைக்காத 
சாபம் .. உன்னைத் தொடுகையில் 
தீரத் தான் தீரும்.. 

உன்னைத் தொடுகையில் 
உன்னில் நானும் 
கரைந்துவிடுவேன் என்பது 
எனது உத்தேசம் .. 
விடவேண்டும் என்பது  
எனது பிரார்த்தனை.. 

மறுபடி நானாக அற்று 
நீயே என்றாகி 
நிறைவு வரைக்கும் 
இருந்து சாகும் எண்ணம் எனக்கு..!!

4 comments:

  1. நீங்கள் ஒரு சிற்பி மாமா.....

    ReplyDelete
    Replies
    1. அதனால தான் உன்னை, உன் அண்ணனை, இவ்ளோ நல்லா என்னால செதுக்கி வைக்க முடிஞ்சிருக்கு ராசா.. ஹிஹி..

      Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...