Sunday, April 27, 2014

மறுபடி மறுபடி..

மறுபடி மறுபடி...


மிகவும் சாஸ்வதம் போல
மிக மிக நிரந்தரம் போல
எவ்வளவு சம்பவங்கள்
வாழ்நாள் நெடுக..
எல்லோருக்குமாக 
அனுபவங்களாகி 
விடுகின்றன??

--அவைகளில் 
ஐக்கியமாகித்
 திளைக்கையில்
ஓர் சுவாரஸ்யம்...
பிய்ந்து உதிர்வது
போல் வெளியேறுகையில்
ஓர் ஆற்றாமை...!!

எல்லோருக்குமே
திரும்பிப் பார்ப்பதற்கான
எவ்வளவு 
மலரும் நினைவுகள்..
அழியா சுவடுகள்??!!

சட்டையுரிக்கின்ற
பாம்பென - எவ்வளவோ
துயர்களைக் 
கழற்றி எறிந்திருக்கின்றன
காலம்..

நத்தை ஓடென
அடைந்து கொள்ளவும்
மீன் தூண்டிலென
மாட்டித் துள்ளவும்
பல சந்தர்ப்பங்கள்..

புலிகளிடம் சிக்கிப்
பிழைத்திருக்கிறோம்..
ஆடு முட்டி
சாகக் கிடந்திருக்கிறோம்..

மரணம் 
நிகழவிருப்பதற்கான
சாத்யக் கூறுகளையும்
நிதர்சன உண்மைகளையும்
தாண்டி .. 
--வாழ்க்கை மட்டுமே
வியாபித்து எங்கெங்கிலும்
விரிந்து கிடப்பதான
மாயையுள் மயங்கிச்
சிலிர்க்கிறோம்..!!

சுந்தரவடிவேலு..

4 comments:


  1. சட்டையுரிக்கின்ற
    பாம்பென - எவ்வளவோ
    துயர்களைக்
    கழற்றி எறிந்திருக்கின்றன
    காலம்..

    நத்தை ஓடென
    அடைந்து கொள்ளவும்
    மீன் தூண்டிலென
    மாட்டித் துள்ளவும்
    பல சந்தர்ப்பங்கள்..

    புலிகளிடம் சிக்கிப்
    பிழைத்திருக்கிறோம்..
    ஆடு முட்டி
    சாகக் கிடந்திருக்கிறோம்..

    Awesome...

    ReplyDelete
  2. oh.. really thank you mr.jeevanSubbu for a comment from your heart..

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் உண்மை...

    அனுபவம்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...