Sunday, April 20, 2014

அரசியல் தெரியாதவனின் ஆதங்கம்..

ஜெயலலிதா வந்து திரும்பிய ஹெலிகாப்டர் மேலேறிப் பறக்கிறது.. 
அந்த ஹெலிகாப்டரின் காற்றாடி விசையோடு சுழல, அந்தப் பிரத்யேகப் பிராந்தியத்தில் காற்று ஓர் சூறாவளி போல அடிக்கிறது.. அமைச்சர்களின் முடிக் கற்றைகள் காற்றில் பரபரக்கிறது.. 
ஆனால் அந்த விசுவாச அமைச்சர்கள் தரையில் குப்புற சாய்ந்து மேலே பறக்கிற அம்மாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த ஓர் அற்புத காட்சியை.. பலரும் பார்த்திருக்கலாம்.. அல்லது எவரேனும் சிரித்துக் கொண்டே சொல்லக் கேள்விப் பட்டிருக்கலாம்.. 

இந்த இவர்களது விசுவாசம்... இவர்களது பெற்ற அம்மாக்களாலும் கட்டிய மனைவிமார்களாலும் மற்றும் இவர்களது அன்புக் குழந்தைகளாலும் வரவேற்கப் பெற்றிருக்குமா?.. இந்த இவர்களது செய்கைக்காக மனசு வெதும்பி "அய்யஹோ.. இந்த மனுஷன் இப்படி மானத்த வாங்குறானே!!" என்று தர்மசங்கடப் பட்டிருப்பார்களா?

அப்படி சங்கடப் பட்டிருந்தால் அந்த அமைச்சரின் குடும்பத்தையாவது பெருமையாக நினைக்கலாம்.. ஆனால், விழுந்து கும்பிடுகிற இவர்களது பத்தாம்பசலிக் கலாசாரத்துக்கு அவர்களும் துணை போவார்களாயின்.. 
இவர்களைப் பார்த்து ஒரே கேள்வி எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.. "அப்படி என்னடா இந்தக் காசை சம்பாதிக்கணும்?.. இந்த ஈனப் பொழப்புப் பொழைக்கறதுக்கும் .. பீயத் திங்கறதுக்கும் அப்டி ஒன்னும் ஆறு வித்யாசங்கள் இருக்கறதா படலை.. காசு பணம் போனா திரும்பி வந்துடும்.. ஆனா, உசுரு மானம் போனா அம்புட்டு தான்.. 
ஆனா இந்த அதிமுக அமைச்சப் பசங்க உசுரோட இருந்தா மட்டும் போதும்னு நெனைக்கிற ஜென்மங்களா இருக்குதுக..  மானமாவது மசுராவது??

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்தக் கொடூரங்களை அனுமதிப்பதே அவதூறு என்றிருக்க .. இந்த நடவடிக்கைகளை ஆகாயத்தில் பறந்த வண்ணமே  பார்ப்பதும் சிலாகிப்பதும் நிகழ்ந்திருந்தால் இந்த சம்பவத்துக்காக ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து வெட்கப் படவேண்டிய சங்கடத்துக்கு ஆளாகிறான்.. 

இன்னொரு கொடுமை... 
மத்தியில ஆளப் போற மோதிக்கு .. நம்ம காப்டன் துணை நிக்கிறாராமா .. ஹிஹி.. இது எப்டி இருக்குன்னா, ஊரெல்லாம் சேர்ந்து இழுக்கற தேரை, அப்டியே லைட்டா   டச் பண்ண, -- இவுரு டச்சிங்ல தான் தேர் அழகா நகருதாம்.. இப்டி மப்புலையே சூளுரைக்கிறாரு நம்ம புரட்சிக் கலைஞர்.. 

வேணும்னா பாருங்க.. மோதி பிரதம மந்திரி ஆனதுக்குக் காரணமே நாந்தான்னு  நாளைக்கு வி.காந்த்  பீத்திக்கப் போறாரு.. நல்ல வேலை, நம்ம லட்சிய திமுக ராசேந்தருக்கு  அப்டி ஒரு சூழ்நிலை ஆயிருந்துதுன்னா அது இன்னும் நாறி  இருக்கும்.. இப்போதைக்கு இந்த தேமுதிக கிளப்பற நாத்தத்தை சமாளிக்கப் பார்ப்போம்.. 

ஓட்டுக் கேக்க மட்டும யோகியணுக போல கும்பிட்டுட்டு பல்லக் காட்டிட்டு வர்ற பசங்க  அப்புறம் ஜெயிச்சா ஏரியா பக்கமே தலைவச்சு படுக்காத கத பழய கத.  இவனுக சொத்தைச் சிரிப்பை இப்பெல்லாம் பொதுஜனங்க நல்ல புரிஞ்சு வச்சிருக்காங்க. அந்தக் காலத்துல தான் பாவம் வெள்ளந்திக.. 
இப்பெல்லாம் அப்டி இல்லை மாமோய்.. 
இப்டி பெரிசா பெனாத்திட்டே ஒரு போக்கிரி பய கிட்ட நாட்டை ஒப்படைப்போம் நாங்க.. அப்புறம் டவுசரைக் காணோம் கோவணத்தைக் காணோம்னு லபோதிபோன்னு அடிச்சுக்கிறது அப்புறம் ஆசுவாசப் பட்டுக்கிறது இன்னைக்கு நேத்தா  நடந்துக்கிட்டு இருக்கு? 
எல்லாம் பழகிப் போச்சு நைனா.. விடு ஜூட்.. 

1 comment:

  1. சரி தான்... பழகிப் போச்சி... வேறு வழியும் இல்லை...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...