Tuesday, April 8, 2014

ஆத்திகவாதிகள் மன்னிக்கணும்.. [மன்னிக்காட்டியும் பரவாயில்லை]

பிரத்யேக விழா காலங்களில் கோவில்களில் கும்மென்று கூடுகிற கூட்டமும், ஸ்வாமி தரிசனத்திற்காக வரிசை கட்டி நிற்பதையும் பார்க்கையில் அந்தக் காட்சி "வாவ். என்னங்கடா இது" என்று வியக்கத் தோன்றும்.. 

சிற்சிறு கோவில்களிலேயே இவ்விதமாக பம்முகிறது கூட்டமென்றால் பழனி திருப்பதி திருச்செந்தூர் குருவாயூர் போன்ற கோவில்களிலோ சொல்லி மாளாத கூட்டம்.. 2 நாட்களெல்லாம் பொறுத்திருந்து வேங்கடானைப் பார்க்க வேண்டியுள்ளது திருப்பதியிலே.. தரிசனம் என்னவோ ரெண்டொரு நிமிடங்கள் தான்.. அதற்குள்ளாக பிடரி பிடித்துத் தள்ளி விடுகிறார்கள் ஆந்திரப் பெண் போலீசுகள்.. ஹிஹி.. அதிலொரு கிளுகிளுப்பு.. 

வெளியே வந்த பிற்பாடு "ஹப்பாடி.. இன்னைக்கு ரொம்ப நன்னா தரிசுச்சுண்டேன் .. போனவாட்டிய விட இந்த தர்ஷன் ரொம்ப பேஷா அமஞ்சிடித்து.. ரொம்ப லக்கி நானு!" என்று அரற்றிக் கொள்வதை கவனிக்கையில் , வாயில் தவிர்த்து வேறேதாவதைக் கொண்டு சிரிக்க வெறி பிறக்கிறது எனக்கு.. 

ல்லை செதுக்கிறது ஸ்தபதி.. பூவையும் பொட்டையும் வச்சு ஜாஜ்வல்யமா அலங்கரிச்சு வுடறது பூசாரிங்க.. நெதமும் ஒரு பெரிய பியூட்டி பார்லரா மாறுது கருவறை.. 
வெளிய நின்னு கும்பிடுற பசங்க .. "என்ன ஒரு ராஜ அலங்காரம்.. காண கண்கோடி வேணாமோ?" ன்னு பெரும பீத்தரச்சே வருது பாருங்கோ ஒரு டென்ஷன்.. எங்க போயி முட்டிக்கிறது?

மக்களை எப்டி எல்லாம் மூளை சலவை செஞ்சு வச்சிருக்காங்க!!.. 
[மனசுக்குப் பட்டதை படக்குன்னு சொல்லிட்டேன்.. இது எந்த பக்தர்களோட மனசையும் புண்படுத்தணும் என்கிற நோக்கமல்ல.. மக்களோட அறியாமை மேல ஒரு கோபமே தவிர மக்கள் மேல அல்ல.. ஏதோ என்னோட நியாயங்களை ரெண்டொருவர் ஏற்கிற பட்சத்தில் கூட எமது இடுகை வெற்றி கண்ட விதமாக நான் குதூகலிப்பேன்..]

2 comments:

  1. உங்களுக்கு கல்லாய் தெரிவது அவர்களுக்கு கடவுளாய் தெரிந்திருக்கலாம்! இன்றைக்கு கோவில்களில் மட்டுமா கூட்டம் கூடுகிறது?

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...