Wednesday, November 9, 2011

திருடனின் நேர்மை...

நகைக்
கடையில் 
ஒன்றரைப் பவுனை
ஒழுங்காகத் 
திருடியவன்
--பெட்டிக்
கடையில்
எள்ளுருண்டை 
திருடி 
பிடிபட்டு
அடி வாங்கினான்...

இதற்கு முன்னர்
என்னென்ன 
திருடி இருக்கிறாய்
என்கிற விசாரணைக்
கேள்வியில்...
நல்ல வேலையாக
"கடலை மிட்டாய்"
என்று மட்டும் சொல்லி
டபாய்த்து விட்டான்...

"ஓடிப் போடா
அற்பத்திருடா "
என்று விரட்டியடிக்கப்
பட்டான்...
அடுத்தநாள் மறுபடி
நகைக் கடையில்
தன் கைவரிசையைக்
காட்டினான் 
நாலு சவரனில் 
சங்கிலி திருடி...

இந்த முறை
எள்ளுருண்டைக்கு 
ரெண்டு ரூபாய் 
கொடுத்துச் சாப்பிட்டான்
அவன்..!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...