Friday, November 25, 2011

முற்றுப் பெறுகின்றன முரண்கள்..

முரண்களினூடே
இயங்கப் பெறுகிறது
வாழ்க்கை..
மிகவும் தெளிவிலிருப்பதாக
நினைத்துக் கொண்டே 
குழப்பங்களைப் 
பற்றிக் கொண்டு 
நீள்கிறது காலம்...


பற்றற்று இருப்பதாக
நினைத்துக் கொண்டு
புதிய உத்திகளோடு
சந்தையில் அறிமுகமாகிற்
பொருள்களைக் 
கையகப் படுத்துகிற
தாகம்... வெட்கமேயற்று
வியாபிக்கிறது மனசுள்...


மௌனத்தை 
மையப் படுத்த
முனைகயிலேயே,
எதையேனும் முணுமுணுக்கப்
பிரயத்தனிக்கிறது வாய்...


வேசி வீட்டு
பூஜையறையில் 
பிரசன்னமான  பக்தி--
கோவிலில் 
அவளை தரிசித்த
போது காணாமற்
போயிருந்தது..


மரணத்திற்கு
எதிர்மறையான 
இந்த வாழ்க்கை...
--மரணத்துடன்
ஒப்பிடுகிற தகுதியையே
இழந்து நிற்கிறது...

மரணம் தெளிவானது
எவ்வித முரண்களுமற்றது...!!


புதைப்பதா எரிப்பதா
என்கிற சர்ச்சைகள் யாவும்
மரணித்திருப்பவனுக்கு
சம்பந்தப் படாதது..!!!



No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...