குழந்தையின் அழுகைஇம்சை என்கிற என் கூற்றை
மனிதாபிமானமற்றது
என்கிறாள் என் மனைவி...
-அயர்ந்து நான்
உறங்குகிற போதோ
தொலைபேசியில்
எவருடனாவது தீவிர
விவாதத்தில் இருக்கிற போதோ
அவள் கதறுகிற நிகழ்வு
அன்றாடம் என்கிற
பழக்கத்துக்கு வந்தாகி விட்ட
போதிலும், அந்த
ஷனத்தின் கோபத்தை
கட்டுப்படுத்தத் தவறி
ரகளை செய்கிற
மகளை பொய்யாக
ஓர் மிரட்டு மிரட்டுகையில்
உதடு பிதுங்கியவாறு
அடங்கிப்போகிறாள் என்றாலும்
மனைவி என்னை
ஹிட்லராக சித்தரித்து
எனக்குள் குற்ற உணர்வை
விதைத்து விடுகிறாள்...
-பிற்பாடான சாவகாச
தருணங்களில்
அப்பா அப்பா என்று
என்னுடன் தான்
சிரித்துக் கொஞ்சி
விளையாடுகிறாள்...எனிலும்
நான் மிரட்டுகையில் எல்லாம்
அவள் அம்மா கட்சி...!!
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
நானும் அம்மா கட்சி.. உங்க கவிதை மாதிரி.. வாழ்த்துக்கள்
ReplyDelete