வார்த்தைகளை விட
தொன்மையானவை
மௌனங்கள்...
மௌனங்கள்--
அமைதியின் அடையாளமாக
தியானத்தின் அடையாளமாக
வார்த்தைகளைக்காட்டிலும்
வீரியம் நிரம்பியதாக
நம் எல்லாரிலும்
ஊடுருவிக்கிடக்கின்றன....
கைதட்டல் வாங்குகிற
வார்த்தைகள் , சமயங்களில்
கல்லடியும் வாங்கக்கூடும்..
ஆனால் மௌனங்கள்
நிராயுதபாணியாக நின்றே
எதனையும் வெல்பவை..
மரணங்களும்
தொன்மையானவை தான்...
ஆனால் தொன்மையான
வாழ்வினை வைத்து
நாம் அதனை எப்போதும்
தவிர்க்கவும் தகர்க்கவுமே
போராடிப்பார்க்கிறோம்..,
ஓர் குழந்தை அடம் பிடித்து
பலூனை பெற்றுக்கொண்டதும்
ஓர் புன்னகை தவழ்கிறதல்லவா...?
--அப்படி இருக்கிறது
நம் வாழ்க்கைக்கான போராட்டம்
அனைத்தும்....
--நாம் அப்படி
போராடி ஜெயிப்பதை
மெல்லிய புன்னகையோடு
ரசித்துக்கொண்டிருக்கிறது மரணம்..!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment