ஓர் மகானின் கட்டுரை..
உலக அறிவு அற்றிருந்த பால்ய விளயாட்டுப்பருவங்கள் மாதிரியான சுவையான தருணங்கள் .. அநேகமாக சாகிற வரை எவருக்குமே கிடைப்பதில்லை..
ஓர் இழையில் எல்லா அறிவுகளும் வந்து மனதைத்தொற்றிக்கொண்டு , அந்த நாட்களை மலரும் நினைவுகளில் வைத்துத் தத்தளிக்க நேர்கிறது...
அதுவும் நம் அப்பாக்களோ தாத்தாக்களோ சந்தித்திராத வினோத சம்பவங்களையும் , விபரீத மரணங்களையும் .. கொடுமையான சோகங்களையும் இன்றைய தலைமுறையினர் மிக சுலபமாக அன்றாடமுமே சந்திக்க தயாரிலும் பீதியிலும் இருக்க வேண்டியுள்ளது என்றால் அது மிகையன்று...
மிகவும் துரிதமாகவும் , ஆடம்பரமாகவும் வளர்ந்து வருகிற அறிவியலும் அது சார்ந்த மனித மூளைகளும் ...
என் போன்ற வெறுமனே தகவல்களை சேமிக்கிற, பொது அறிவை வளர்த்துக்கொள்கிற நபர்களின் கூட்டம் தான் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கெங்கிலும் அதிக சதவிகிதம்... டெக்னாலஜி யில் அப்டேட் செய்து சாதிப்பவர்களின் சாதனைகளை அன்றாடம் தகவல்களாக அப்டேட் செய்வதே எங்கள் போன்றவர்களின் சாதனை...{?}
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.... எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்திகளாக வெளி வந்து ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிற ஓர் சூழ்நிலையில் கூட "எதுக்குடா எல்லாரும் என்னவோ மாதிரி இருக்கீக?" என்று சன்னமாக தனது சந்தேகத்தை கேள்வியை கேட்கிற சாதனையாளர்களும் உண்டு...
ஒரே குடையின் கீழ் இப்படி சாதிப்பவர்களும், தகவல் திரட்டிகளும், எதுவுமே உரைக்காதவர்களும் வாழ்ந்து வருகிறோம்...
என்னவோ சொல்ல வந்தவன் என்ன சொல்வதென்றே புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன்... எனக்கு நானே என்னை தகவல் திரட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது சற்று குற்ற உணர்வாக உள்ளது..."எதுவுமே உரைக்காத" லிஸ்டில் சேர்வதே சாலச்சிறந்தது என்று கூட தோன்றுகிறது இந்த மகானுக்கு....ஹிஹிஹ்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, November 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment