Saturday, November 13, 2010

சமாளிப்பு..

 என்றோ ஒரு நாள்
ஓர் சுவாரஸ்யமான
கவிதை ஒன்றை               
எழுதி வைத்ததாக
ஞாபகம்...
-மறுபடி அதனைக்
கொணர்வதற்கான
முஸ்தீபுகளை
மேற்கொண்டாலும்
அதே கோர்வையில்
வார்த்தைகள் பிடிபட
மறுக்கிறது.. மற்றும்
அந்தக் கருத்துக்
கூட அத்தனை தெளிவாக
நினைவிலில்லை...
--இவ்வளவு இம்சையில்
அது குறித்து எதற்கு
இத்தனை பிரலாபம்?

கவிதை வறட்சியில்
ஓர் பழைய கவிதைக்கான
தேடல்..
அது கிடைக்கவில்லை
என்கிற அவஸ்தையைப்
பதிவு செய்வதில்
இப்போது ஒரு கவிதை...??

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...