{இப்படியாக சிலரை என் வாழ்நாளில் சந்திக்க நேர்ந்ததன் பொருட்டு எனக்குள் இப்படி ஓர் காழ்ப்பு... ஆனால் இப்படியான ஈனத்தமையில் உலவுபவர்களால் தான் நல்லவர்கள் இன்னும் நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று கருதுகிறேன்.}
உன் உற்சாகம்
எனக்கு வெட்கமாக
இருக்கிறது...
ஓர் நாசுக்கில்லாமல்
குதூகலிக்கிறாய்...
உன் உற்சாகத்தைக்
காட்டிலும் உன்
சோபை இன்மை
நாகரீகமாக தெரிகிறது...
இங்கிதமற்ற உன்
பேரானந்தம்
என்னுள் இம்சை
விளைவிக்கிறது...
உன் சிரிப்பைக்காட்டிலும்
ஓர் அறை விட்டு உன்னை
அழவைப்பது
ஆரோக்கியமாகப்
படுகிறது எனக்கு...
உன் சந்தோஷத்தின்
மீதான என்னுடைய கோபம்
எல்லாருக்கும் என்னை
"பயித்தியக்காரன்" போல
தோற்றுவிக்கலாம்..,
--ஆனால் என்னைப்போல
உன்னை அன்றாடம்
தரிசிக்கிற அவஸ்தைகளை
அவர்கள் அனுபவிக்காத போது
அப்படித்தான் தோன்றும்..
இருக்கட்டும்..!!
உன் கால்களுக்கான
பாதணிகளை மாத்திரம்
தேர்ந்தெடுக்கிற சுயநலமி நீ..
--போலியோ பாதிப்பில்
விந்தி நடக்கிறவர்களைப்
பார்த்து, கையில் கூட வாயை
மூடத்தெரியாமல் சிரிக்கிற
உன் போன்ற ஓர் ஜென்மத்தை,
அதன் சிரிப்பை எப்படி
பொறுத்துக்கொள்வது??
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment