Thursday, November 25, 2010

காகிதப்பூ

மூன்று நாள்
முள்தாடியை
விரல்களால் நெருடியபடி
ஓர் நல்ல கவிதைக்கு
யோசித்துக்கொண்டிருப்பதைக்
காட்டிலும் -
நேர்கிற சுகமான இயல்பான
அனுபவங்களைக்
கவிதையாக பகிர்ந்துகொள்ளப்
பிரயத்தனிப்பது
நல்ல கவிஞனின் அடையாளம்..!

சமயங்களில்
அனுபவக் கவிதைக்கான
வார்த்தைகள் பிடிபட
மறுக்கலாம்..,
கற்பனையாகப் புனைகையில்
சுவாரஸ்யமான வார்த்தைகள்
பீறிடலாம்...
--அதற்காக அந்த அனுபவ
உணர்வுகள் அழிவதில்லை.!!

கற்பனைக்கு பிடிபட்ட
வார்த்தைகள் காகிதப்பூக்கள்..,
வார்த்தை பிடிபடாத
அந்த அனுபவ உணர்வுகள்
வாசனை மலர்கள்..!!            

கிட்டத்தட்ட இந்தக்
கவிதையைக்
  கூட மணக்காத
காகிதப்பூ போல தான்
உணர்கிறேன் நான்...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...