எல்லா ரகளைகளுடனும்
இளமை குதூகலத்தில்
கும்மியடித்துக்கொண்டிருந்தது.
தீபாவளி என்றால்
அதற்கான எல்லா சுகந்தங்களும்
வீரியம் பெற்று
ரத்தத்தை அதீத சூடேற்றிய
வண்ணமாகக் கழியும்....
ஒற்றை வெடியைக்கூட
சுவாரஸ்யம் குன்றாமல்
லொட்டு லொட்டு என்று
ஓயாமல் வெடித்துத் திரிவோம்..
-இன்று கட்டு வெடி வெடிக்கவே
அசுவாரசியம் வந்து விடுகிறது..
இளமையின் அதே வீச்சில்
மறுபடி தீபாவளி வராதா
என்கிற ஏக்கம்
இப்போது வருகிற
எல்லா தீபவளிகளின் போதிலும்..!!
நம் அத்தனை
ஆனந்தங்களையும் நம்
குழந்தைகள் இந்த நாட்களில்
உணர்கிறார்களா என்பது
கேள்வி தான் என்ற போதிலும்
நமது சுவாரஸ்யம் குறித்த
இதே வித கேள்விகள்
அன்று நம் பெற்றோர்களிடமும்
இருந்திருக்குமோ என்னவோ...?
ஆக, எல்லா தலைமுறைகளுமே
தனக்கு நேர்ந்தவை மாத்திரமே
மகோன்னதமானவை என்கிற
தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து
வருவதாக அனுமானிக்கிறேன்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment