Saturday, October 9, 2010

காலக்கைதி

விளையாடுகிறது
என்று நினைத்தால்...
--மனசைக்கீறி
ரணப்படுத்தி இருக்கிறது
காலப்பூனை..!

என்னைக் கடித்துக்
குதறப்போவது புரியாமல்
மாரில் அழுத்திக்
கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறேன்...          

--பூனை பாவனையில்
புலியாக இருக்கிறது காலம்..,
காலப்புலி...!!

மண்புழுவென 
நினைத்த "காலம்"
பூராணாக ஊர்கிறது....
--சுழற்றும்  சாட்டை
என கருதிய "காலம்"
கொத்தும் பாம்பாக நெளிகிறது..


பூக்களை சொரியுமென்று
நினைத்தால்
முட்களை செருகுகிறது காலம்..
பன்னீர் தெளிப்பதாக
நினைத்தால் எச்சிலை உமிழ்கிறது...

--என் மரணத்தைக்
காரணம் காட்டியாவது
காலத்தை நான்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தாமல் விடமாட்டேன்..!!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...