Tuesday, October 12, 2010

நேரம் காலம் நல்லா இருந்தா...

எழுதி சம்பாதிக்கிற எண்ணம் கொண்டவர்கள் ... அது சாத்யமாவது அவ்வளவு எளிமையுமல்ல, அவ்வளவு சிரமமும் அல்ல... இப்படி இரண்டு வகையறா கோணங்களிலும் வசீகரமாக உணர வைக்கிற இந்த உலகம் ஆச்சர்யம் நிரம்பியது..
அந்தக்காலகட்டங்களில் எழுதி, எழுத்தாளர்களாக பிரபலமானவர்கள் உண்டு., பிரபலமாகாமலே நன்றாக எழுதியவர்களும் உண்டு..
எது எப்படியான போதிலும் எழுதி எவரும் பெரிய கோடீஸ்வரர்களாக ஆனதாக எந்த செவி வழி செய்திகளும் இல்லை..

ஆனால் இன்றைய சூழல்கள் வேறு... கண்டதையும் எழுதி விரல் நொந்து கிடக்கிற பல எழுத்தாளர்களும்  உண்டு,  சும்மா feather touch செய்து லட்சம் கோடி அள்ளுகிற கில்லாடி எழுத்தாளர்களும் உண்டு.. உதாரணமாக வைரமுத்து, பா.விஜய், என்று நீண்டதொரு பட்டியல் போடலாம்... உடனே அவர்கள் மீதாக அவசரப்பட்டு பொறாமை கொள்வது அறிவீனம்.. அவர்களது இலக்கிய அறிவு, அதனை நாசுக்காக கையாள்கிற திறன், ரசிகர்கள் வியக்கும் வகையில் காட்சிகளில் கற்பனா சக்தியை கொணர்வது..., இப்படி நிறைய திறமைகள் இருக்கும் அவர்களை எல்லாம் ஆய்வு செய்கையில்...

நாமெல்லாம், டுபாக்கூராக நான்கு வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொண்டு சுலபத்தில் கவிதை எழுதி விடலாம், பிரபலக் கவிஞர்கள் ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பது வீண்வேலை...  

விஷய ஞானம், அதை பாங்காக வெளிக்கொணரும் திறமை..... யாவற்றையும் விட நேரம் அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சேர கும்மி அடித்தால் நாமும் ஆனந்தக் குலவை கொட்டிக்கொண்டு பிறரை பொறாமை கொள்ள செய்து கொண்டிருக்கலாம்....

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...