Tuesday, October 5, 2010

அனாதையாகும் திறன்கள் ..

எவருடைய டைரிகளை எடுத்தும் எனது சரிதங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் எனது பால்ய காலங்களில்...இன்னொருவர் டைரியை பார்ப்பதோ படிப்பதோ அநாகரீகம் என்றிருக்க நான் கொஞ்சமும் இங்கிதமற்று எழுதியிருக்கிறேன்..
நல்ல வேலையாக நான் அப்படி கிறுக்கிய டைரிகள் யாவும் எனது தந்தை  மற்றும் சகோதரிகளின் டைரிகள் என்பதால் வெறும் திட்டு வாங்கியதோடு தப்பித்துக்கொண்டேன்...
விவஸ்தை  ஏதுமற்று என் அன்றாட நிகழ்வுகள் யாவற்றையும் அந்த டைரிகளில் தத்துபித்தென்று எழுதிக்குவித்து விடுவேன்...          

என் எழுதுகிற தன்மை உணர்ந்து அவர்களாவது எனக்கு ஒரு டைரி பரிசாகவோ "இந்தா வச்சுத்தொலை" என்றோ கொடுத்திருக்கலாம்... குறைந்த பட்சம் பழைய பாடாவதி டைரி யாவது கொடுத்திருக்கலாம்.. அவ்வளவு டைரி யிலும்  ரெண்டொரு பக்கங்கள் சின்ன வரவு செலவு கணக்குகளோ இன்னபிற அவர்களது படிப்பு சம்பந்தமாக எதாவது நாலு பக்கங்கள் மாத்திரம் தான் எழுதி இருப்பார்கள்.. 

இதை நான் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு சொல்ல வருகிறேன் என்றால், ஏதேனும் எழுதுகிற திறனுள்ள ஒரு நபரை அந்தக்குடும்பத்தில் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அதனை மதியாமலும், பழித்துக்கொண்டும் இருப்பது எந்த விதத்தில் ஆரோக்கியம் என்பது எனக்குப்புரியவில்லை... 

எழுதுகிற திறன் மட்டும் அல்ல, வேறு வகையறா சார்ந்த திறன்கள் ஏதேனும் ஒரு நபருக்கு இருப்பினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிற பாங்கு வேண்டும், அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு.. திறன்களை அடையாளம் காணும் திறனற்று இருப்பவர்களைக்கூட மன்னிக்கலாம், ஆனால் அது தெரிந்தும் வெறுமனே இருப்பவர்களை என்ன செய்வது....இப்படித்தான் பல குடும்பங்களில் பல கலைகள் அனாதையாக அரங்கேற முடியாத அவஸ்தைகளோடும் மௌனமான வலிகளோடும் உயிருடன் புதையுண்ட வண்ணம் உள்ளன...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...