Thursday, September 23, 2010

உள்ளொன்று வைத்து...

இன்னொருவன் மனைவி
என்னைப்பார்த்து சிரிப்பதில்
எந்த விபரீதங்களும் இல்லை..
இன்னொருவனைப்பார்த்து
என் மனைவி சிரிப்பதே              
விபரீதமெனக்கு...
--என் மீது எனக்குள்ள
நம்பிக்கை
என் மனைவி மீது
இல்லாதது வினோதமே..

இத்தனைக்கும் நான்
பிறன் மனை புணர்வதற்கான
சந்தர்ப்பம் வாய்க்கையில்
அதனைக்கூட சாதகமாக்கிக்
கொள்கிற ஏற்பாட்டில் இருக்கிறவன்..,
--ஆனால்
தன்னைப்பார்த்து எவனாவது
சிரித்தாலே கூட
அதனை ஓர் புகார் போல
என்னிடம் முறையிடுபவள்
என் மனைவி..
''என் புத்தியை
அவள் தன்மையோடு
ஒப்பீடு செய்கிற யோக்யதையே
கிடையாது'' என்கிற கூற்றில்
ஆணித்தரமாயுள்ளேன்
என்ற போதிலும்
--எவனாவது
பல்லைக் காட்டறான்னு
நீயும்  எங்காச்சும்
இளிச்சுக்கிட்டு நிக்காதே---
என்கிற ஓர் மிரட்டலோடு
வெளிக்கிளம்புவேன்
அனேக சமயங்களில்.....!!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...