மிகவும் மனதை பாதிக்கிற விஷயங்களுள் தலையாயது பால்ய சிநேகிதனின் மரணம் என்று தான் நினைக்கிறேன்.. நான்கைந்து நாட்கள் முன்னர் என் இளம்ப்ராயத்தோழன் ஒருவன் பைக்கில் செல்போன் பேசியவாறு பயணித்ததில் ஏதோ ஓர் மரத்தின் மீதோ பாலத்தின் மீதோ மோதி தூக்கிஎறியப்பட்டு அதே இடத்தில் அகால மரணம் அடைய நேர்ந்தது..
எவ்வளவோ முறைகள் எங்களுக்குள் மனஸ்தாபம் வந்திருக்கிறது, கைகலப்பு செய்திருக்கிறோம் , மறுபடி சில மாதங்களோ வருடங்களோ பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறோம்... அதன் பிறகு மனமுதிர்வு அடைந்த கால கட்டங்களில் இருவரும் முந்தைய நடவடிக்கைகள் குறித்து மலரும் நினைவுகளாக பகிர்ந்து அந்த சிறுபிள்ளைத்தனங்கள் மீண்டும் வாராதா என்று ஏங்கி இருக்கிறோம்....
மரணம் இப்படியாக எல்லா உணர்வுகளையும் உறவுகளையும் சுலபத்தில் கபளீகரித்து விடுவது வேதனை நிரம்பிய வியப்பு...
அவனது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா ... அது மனித மூளையின் அபரிமிதமான கற்பனையா...அதே போன்று, அடுத்த பிறவி என்பதும் ஓர் சுகமான கற்பனை என்றே அனுமானிக்கிறேன்...
அப்படி ஆத்மா இருக்கிற பட்சத்தில் ---எல்லாரும் பிரார்த்தித்துக்கொள்வது போல---சத்தியமாக அது சாந்தி அடையட்டும்... அடுத்த பிறவி இருக்கிற பட்சத்திலும், அவன் அடுத்த பிறவியிலும் என் நண்பனாகவே வந்து அவதரிக்கட்டும்...
..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment