Wednesday, September 1, 2010

ஓர் சபலிஷ்டின் அவஸ்தை....

நானும்
சபலக்காரன் தான்
என்ற போதிலும்
மற்ற சபலப்பேர்வழிகளைப்
பிடிப்பதில்லை எனக்கு...                    
பாம்பின் கால்
பாம்பறியும் போல
யார் எந்த சபலத்தில்
இருக்கிறார்கள் என்கிற
முக ஜோதிடம்
எனக்குத்தெரியும்...{?}

இப்படித்தானே
நானும் அடையாளப்
படுவேன் ? என்கிற
சங்கடங்களும் அச்சங்களும்
உண்டென்ற போதிலும்
--அப்படிப்
பிரித்துணரும் வண்ணம்
அப்பட்டமானதல்ல
என் சபலம்
என்கிற அனுமானம்,
 மற்றும்
நம்பிக்கை எனக்கு...

ஒவ்வொரு சபலக்காரனும்
இவ்வித நம்பிக்கையில் தான்
இருப்பான்?

சபலங்கள் தவிர்க்கப்பட்ட
வாழ்க்கை மிகவும்
யதார்த்தமானது...
சத்யம் நிரம்பியது...!
-அப்படிப்பட்ட நபர்களையும்
நான் அடையாளம் காண்பேன்...,
--குறைந்த பட்சம்
அவர்களினிடமாவது
என் சபலம் அடையாளப்
பட்டுவிடக்கூடாது என்பது
என் பிரார்த்தனை..!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...