எத்தனை தீவிரமாகக்
கண்காணித்தும் தப்பி
விடுகிற திருடன் போல
--உன் முகம்
உன்னைப் பார்க்காத
போதெல்லாம் மறந்து
விடுகிறது...
ஐந்தாம் வகுப்பிலேயே
1330 குறள்களையும்
கரதலப்பாடமாக
மனனம் செய்து அசத்திய
என் அசாத்ய திறன்கள்
எங்கே ஓடி ஒளிந்தனவோ
புரியவில்லை...
இப்படியெல்லாமா காதல்
என்னை மக்குப்பயலாக்க வேண்டும்?
--குட்டிக்கொள்கிறேன் என் மண்டையை நான்..
எதிரில் நீ தரிசனம் தருகிறாய்..
மறந்து போகும் போதெல்லாம்
குட்டிக்கொள்வது என் பால்ய
ப்ராயந்தொட்டு வந்த வழக்கம்..
அப்படி குட்டுகையில் ஞாபகமும்
வந்துவிடும்...
அப்படியே தான் உணர்கிறேன்
இப்போது குட்டிக்கொள்கையில்
நீ எனக்கு தரிசனம் தந்ததையும்..!!
சுந்தரவடிவேலு....
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment