Tuesday, April 20, 2010

தத்துவப்பித்தனின் தத்துபித்துக்கள்

எவரேனும் நம்மை கவனிக்கவேண்டும், நம் இருப்பில் பேரானந்தமும் நம் இல்லாமையில் கடும் துயர்களும் அனுசரிக்கப்பட  வேண்டும் ... மிகப்பெருமையாக நாம் எல்லாராலும் பேசப்பட வேண்டும்,  எந்தத்தருவாயிலும் நம் பருப்பு வேகாமல் போய் விடக்கூடாது என்கிற அதீத பிரக்ஞைகள் ஒவ்வொருவர் வசமும்...
சின்ன தோல்விகள் கூட பெரிய கௌரவகுறைச்சல் போல மிகவும் சிரமப்படுகிறார்கள் பலரும்.. வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்கிற எழுதப்படாத சட்டங்களுள் சிக்கி தன் பயணங்களை மிகவும் சிரத்தை எடுத்து வாழ்கிற போக்கு ஒரு கோணத்தில் ஆரோக்யமாக உணரப்பட்டாலும் இன்னொரு கோணம், அந்தத்தன்மை ஏதோ ஓர் நோய்வாய்ப் பட்டதாகத் தான் புரிகிறது..
வெற்றி தோல்வி சகஜம் என்கிற மனப்பாங்கு வேண்டும்.. ரெண்டு விஷயங்களையும் அனுபவமாக, சுலபமாக எடுத்துக்கொள்கிற பக்குவம் வேண்டும்..
வெற்றியில் மட்டுமே கிறங்கிப் போயும் தோல்வியில் துவண்டு போயும் .. கிடப்பது அறிவீனம்...

இன்னும் சொல்ல முயல்கிறேன்...
நீங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்கிற வரை ..!!       

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...