Thursday, April 22, 2010

அனுப்பப்படாத காதல் கடிதங்கள்....

என் மதிப்பிற்குரிய காதலிக்கு...

நான் எழுதுகிறேன்.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுதுகிறேன்..
சற்றும் எதிர்பாராமல் கனவில் நீ வந்ததால் உடனே உள்ளொளி பொங்கி விழிப்புத்தட்டியது...
இருண்டுபோய் பிசுபிசுத்து ஒட்டிக்கிடக்கிறது உடலில் உயிர்... எந்த நேரத்திலும் பிய்ந்து போவதற்கான சாஸ்வதங்களுடன்...
ஷணத்தில் வந்து மறைந்த உனது முகம், கனவு முகம் என் உயிரை, என் வாழ்வை மறுபடி புதுப்பிக்கக்கிடைத்த  அங்கீகாரம் போல,  அத்தனை ஆசுவாசத்துடன்- நேரம் கூடப்பாராமல் உடனடியாக பேனா எடுத்து எழுதி விடத்தூண்டிய அவரசரம் ஆச்ச்சர்யமளிக்கிறது..
வெறுமனே வந்தாய்.. வார்த்தை கூடப்பேசவில்லை.. அதற்குள்ளாக விழிப்பு வேறு வந்து விட்டதே..பிறகு? உன்னைப்பார்த்தான பிறகு உறங்கிக்கொண்டிருக்க முடியுமா... அது கனவு தான் என்ற போதிலுமே கூட?.. அதுவும் கனவு என்பது விழித்த பிறகல்லவா தெரிகிறது!!

-கனவு மாதிரியே விழிப்பும் வந்து போவதாயில்லை..
விழிப்பு, அடர்ந்து படர்ந்து கிடக்கிறது.. கனவு மாதிரி சுகமாயில்லை விழிப்பு.. கவலை மை இழுக்குகிறது.., ஏக்கச்சேற்றை வாரி இறைக்கிறது ... வாழ்வை பயமுறுத்துகிறது...
தைரியங்களையும் சந்தோஷங்களையும் நீர்க்குமிழிகளாய் வைத்திருக்கிறது விழிப்பு..!!

விழிப்பு வாழ்வெனில், உறக்கம் மரணமோ?
ஆனால் மரண பயமே கூட விழிப்பில் தான் வருகிறது.., மற்றபடி உறக்கத்தில் வாழ்க்கை குறித்த பயங்கள் எல்லாம் எதுவும் வருவதில்லை...!!

நமஸ்காரம் காதலியே..           ..
உன்... பிரியமானவன்?

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...