Wednesday, April 14, 2010

நிகழ்காலம் சுவாரஸ்யப் படுவதில்லை

வயோதிகம்-
எந்த இழையில் வந்து
இளமையைக் கபளீகரிக்கிறது
என்கிற புரியாத
புள்ளி விபரங்களோடு......

நரையைத்திரையிட
ரசாயனம் தேடும் கிழமனது..
கருப்பாய் நடிக்கத்துவங்கும்
நரைமுடிகள்...
-செயற்கை கருமை
குறித்து அடியாழக்
குற்ற உணர்வொன்று...!!

நிகழ்காலமென்பது
எல்லா ப்ராயங்களிலுமே
தொந்தரவாகவே தான்
உணரப்படுகிறது..,
16  வயதிலுமே கூட
கடந்து போயிருந்த
12 வயது குறித்த
கவலைகள் தான்..
திரும்ப அந்த வசந்தங்கள்
வரவே வராதே என்கிற
அநியாய ஏக்கங்கள்...
--அதனைக்காட்டிலுமான
வசந்தங்கள் தற்போதைய
அனுபவத்தில் இருந்தாலும்
கடந்து போன அந்த
எளிய வசந்தங்கள் கூட
வனப்பாகப் புரிபடுகிற ஒரு மாயை
புதிர்தான்...
வனப்பாகப் புரிபடுகிற அந்தப்புதிர்
ஓர் மாயை தான்...!!

சுந்தரவடிவேலு..   

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...